தந்தையின் ஈமச்சடங்கில் பங்கேற்பதற்காக ராஜிவ் கொலை குற்றவாளிகளில் ஒருவரான நளினி, சென்னை ஐகோர்ட்டில் மூன்று நாள் பரோல் கேட்டு மனுசெய்தார். இன்று நடந்த விசாரணையில் மூன்று நாள் பரோல் அளிக்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மனுவை விசாரித்த நீதிபதி ஒரு நாள் பரோல் அளித்து உத்தரவிட்டார்.

