கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சாவித்திரி பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பேசும்போது, பெண்களை இழிவு படுத்தும் விதமாக, அவரது படத்தில் நாயகிகளை அவர் துரத்தி துரத்தி காதலிப்பதை மட்டும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் ஒன்று நாயகிகளை அவர் முத்தமிட வேண்டும் இல்லையென்றால் இல்லை அவர்களை கர்ப்பமாக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த இன்று, பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்டுள்ளார். ”பெண்கள் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளதாகவும், அனைத்து பெண்களையும் தனது குடும்பத்தைச் சேர்ந்த சொந்த சகோதரிகளாக பாவிப்பதே தனது குடும்பத்தின் வழக்கம் என்றும் பாலகிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



