ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூன் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நடைபெற்ற விசாரணையில் நீதிபதி ரவி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூடுதலாக அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.



