December 6, 2025, 10:05 AM
26.8 C
Chennai

குழந்தைகள் மரணம்-நல்வாழ்வுத் துறை திட்ட ஊழல்களே காரணம்: வைகோ

19-03-15 Vai.Ko News photo 03சென்னை:
தமிழக அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது என்று
வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் மரணம் தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 13 பச்சிளம் குழந்தைகள் இறந்தன.
கடந்த 15 ஆம் தேதியில் இருந்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து 8 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு பெயரளவுக்குத்தான் இயங்கி வருகின்றது. குழந்தைகள் சிறப்புப் பிரிவுக்கு போதுமான அளவு மருத்துவக்கருவிகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட இன்றியமையாத கட்டமைப்புகள் போதுமானதாக இல்லை. மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையும் உள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுமையான அடிப்படை வசதிகள் இல்லாமலும், சுகாதார சீர்கேடுகள் மலிந்தும் காணப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இங்கு தீவிர சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தேவையான பால் வழங்குவது கூட நிறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பால் வழங்கி வரும் ஆவின் நிறுவனத்துக்கு உரிய கட்டணத்தொகை செலுத்தாமல் நிலுவையில் உள்ளதால், ஆவின் நிறுவனம் பால் வழங்குவதை நிறுத்திவிட்டது. இதனால் இங்கு சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பால் வழங்குவதை கூட அரசு மருத்துவமனை நிர்வாகம் ஒழுங்காக கவனிக்கவில்லை. ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடி வருகின்றபோது, அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கின் காரணமாக, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட நிகழ்வுகள் சர்வசாதாரணமாக ஆகிவிட்டது.
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் இறப்புக்கு, ஊட்டச்சத்து குறைபாடுகளும், எடை குறைவும்தான் முதன்மைக் காரணம் என்று தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் நேரில் சென்று ஆய்வு நடத்திவிட்டு தெரிவித்து இருக்கின்றார். ஊட்டச்சத்து குறைபாடுகளால், எடைக் குறைந்த குழந்தைகள் பிறக்கும் போதே நோய் எதிர்ப்பு சக்தி இன்றி மரணம் அடைவது தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகின்றது.
கர்ப்பிணிப் பெண்களைக் கண்காணித்து அவர்களுக்கு ஊட்டச் சத்துணவு கொடுப்பதற்காக தமிழக அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனாலும், பச்சிளம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் பிறப்பது ஏன்? அரசு நல்வாழ்வுத்துறையின் திட்ட செயல்பாடுகளில் ஊழல்கள் பெருகி உள்ளதே இதற்கு காரணம். இது தவிர, பெண்கள் கர்ப்பமடைந்த மூன்று மாதங்களுக்குப் பின்பு அவர்களுக்கு தடுப்பூசி போடுவது, சத்து உருண்டை தருவது, மாத்திரை வழங்குவது என்று கிராம செவிலியர்கள் பராமரித்து வருகின்றனர். சுகாதாரத்துறையில் மருத்துவ பணியாளர்கள், கிராம செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் கிராமப்புற சாதாரண ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல்களை களைந்தெறிய வேண்டும். ஏழை, எளிய மக்களின் சுகாதார மேம்பாட்டிற்கும், மருத்துவச் சிகிச்சைகளுக்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். – என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories