December 6, 2025, 10:07 AM
26.8 C
Chennai

கர்ர்ர்ர்.. தூ..! திமுக.,வைப் பார்த்து கஸ்தூரி துப்பியது எதுக்கு தெரியுமா?!

kasthuri - 2025

கஸ்தூரிக்கும் திமுக., உ.பி.ஸ்க்கும் ஏழாம் பொருத்தம் தான்! கஸ்தூரி தனது டிவிட்டர் பதிவுகளில் கருத்துகளைப் பகிர, அதற்கு மிகக் கேவலமாக நடிகை என்ற நிலையில் கொச்சைப் படுத்தும் வசைச் சொற்களால் பின்னூட்டம் இடுவர்.  இதனால் அவ்வப்போது கஸ்தூரிக்கும் திமுக., டிவிட்டர் டீமுக்கும் வாய்க்கா வரப்புத் தகராறு வந்து டிவிட்டர் களமே களை கட்டிவிடும்.

இந்நிலையில், திமுக.,வின் ஒரு செயலுக்காக, இப்போது சமூக சேவகியான கஸ்தூரி கொஞ்சம் கூடவே உணர்ச்சி வசப்பட்டு… கர்ர்ர்ர்ர் தூ… என்று சவுண்டு விட்டிருக்கிறார்.

மோடிக்கு எதிராக விவசாயிகளை டெல்லி வரை சென்று போராடத் தூண்டியதும், எங்களை முழுமையாக இயக்கியதும் காங்கிரஸ் மற்றும் திமுகதான் – அய்யாகண்ணு கர்ர்ர்ர்ர்…தூ!

காவிரி பாசன விவசாயிகள் அமைப்புத் தலைவராக இருந்த அய்யாக்கண்ணு, திமுக.,வின் மேடைகளில் தோன்றி, திமுக., வின் குரலை விவசாயிகள் மாநாடு என்ற வகையில் விவசாயிகளின் குழுவுடன் எதிரொலித்துக் கொண்டிருந்த வரையில், அய்யாக்கண்ணு ஒரு தூய்மையான தன்னலமற்ற, மாபெரும் போராளி விவசாயியாக திமுக.,வினர் மேடைகளில் பேசிக் கொண்டிருந்தனர். மேலும், சமூக வலைத்தளங்களிலும் அய்யாக்கண்ணுவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு உடன்பிறப்புக்கள் எழுதிக் குவித்தனர்.

அதே நேரம், பாஜக., சார்புள்ளவர்களோ, ஆடிக்கார் அய்யாக்கண்ணு என்று கேலி செய்தனர். இவர் விவசாயி அல்ல என்றும், அவருக்கு எப்படி போராடுவதற்கு பணம் கிடைக்கிறது என்றும் விமர்சனம் செய்து வந்தார்கள்.

இந்நிலையில், பாஜக., தனது தேர்தல் அறிக்கையில், விவசாயக் கடன் தள்ளுபடி தவிர, ஏனைய நதி நிர் இணைப்பு, நதி நீர் இணைப்புக்கு தனி அமைச்சகம்,  விவசாயிகளுக்கான வட்டியில்லா கடன் உதவி, எளிய கடன் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து உறுதி கூறியதால், அய்யாக்கண்ணு தில்லியில் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். பின்னர் தனது போராட்டத்தைக் கைவிடுவதாகவும், தங்கள் கோரிக்கைகளை பாஜக., நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளதால் தாங்கள் மோடிக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என்றும், பாஜக.,வுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறினார்.

இது தமிழக அரசியல் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து, திமுக.,வின் விமர்சனங்கள் கூர்மை ஆயின. இப்போது ஆடிக்கார் அய்யாக்கண்ணு கோஷத்தை திமுக.,வினர் எடுத்துக் கொண்டனர். பாஜக.,வினரிடம் வசைப்பாட்டு வாங்கியதை விட எவ்வளவு மோசமான தாக்குதல்களை தாம் எதிர்கொள்கிறோம் என்பது இப்போது அய்யாக்கண்ணுவுக்கு புரிந்தது

இந்நிலையில் மோடிக்கு எதிரான போராட்டத்தை தூண்டிவிட்டு, பின்னணியில் இருந்ததே திமுக.,தான் என்று பளிச்சென்று கூறினார் அய்யாக்கண்ணு. தமிழகத்தில் காவிரி விவகாரம் உள்ளிட்ட அனைத்து நதி நீர் விவகாரங்களிலும் காவிரி நீர் மேலாண்மை வாரியப் பிரச்னையிலும் மத்திய அரசின் நியாயமான மற்றும் தமிழகத்துக்குச் சாதகமான  பல அம்சங்களை மறைத்து திமுக மேற்கொண்ட அரசியலுக்கு தாமும் உடன்பட்டதாக் அவர் கூறிய சில விசயங்கள் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், திமுக.,வின் இந்தச் செயலுக்காக கஸ்தூரி, கர்ர்ர்ர் தூ என்று காறித் துப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories