சேலம்: மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்த் தேவைகளுக்காக கூடுதலாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியாகக் குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனப் பகுதிகளில், பாசனத்துக்காக ஜூன் 12ஆம் தேதிகளில் தண்ணீர் திறக்கப்பட்டு, ஜனவரி 28ஆம் தேதி நீர் திறந்து விடுவது நிறுத்தப்படும். இதே போல் இந்த ஆண்டும் ஜனவரியில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் 70 அடியாகக் குறைந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடியாகக் குறைவு
Published:

