சென்னை சேமிப்பு கிடங்கில் ரூ.1.65 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கொள்ளை

சென்னை சேமிப்பு கிடங்கில் ரூ.1.65 கோடி செம்மரக்கட்டைகள் கொள்ளை

red sandalwood - 2026
சென்னை மாதவரத்தில் உள்ள மத்திய அரசு சேமிப்பு கிடங்கில் கன்டெய்னரில் பாதுகாத்த ரூ.1.65 கோடி செம்மரக் கட்டைகள் கொள்ளை இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை மாதவரம் மேம்பாலம் அருகே மத்திய அரசின் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டுகளுக்கு கடத்தப்படவிருந்த ரூ.1.65 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளுடன் பறிமுதல் செய்த கன்டெய்னர் லாரிக்கு சீல் வைத்து சுங்க இலாகா அதிகாரிகள் பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில், இந்த கிடங்கில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்த கன்டெய்னர் லாரியின் சீல்லை இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம கும்பல் உடைத்து, அதில் வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மாதவரம் போலீசில் சேமிப்பு கிடங்கின் மேலாளர் புகார் அளித்தார்.

இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தீவீர விசாரணை நடத்தி வருகின்றார் . இதனையடுத்து அந்த கிடங்கில் கன்டெய்னர் லாரியில் பாதுகாத்து வைத்திருந்த செம்மரக் கட்டைகளை கணக்கிடும் பணி நடைபெறுகிறது. அப்பணிகள் முடிந்ததும் எவ்வளவு கட்டைகள் கொள்ளை போயின என்பதும், இக்கொள்ளையின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்த விபரங்கள் தெரியவரும். இந்த கிடங்கில் கன்டெய்னர் லாரியில் இருக்கும் செம்மரக் கட்டைகளை 24 மணி நேரமும் பாதுகாக்கும் பணியில் காவலர்கள் இருந்துள்ளனர். இத்தகைய பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி செம்மரக் கட்டைகள் கொள்ளை போனதில் காவலாளிகள், கிடங்கு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் தொடர்பு இருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories