December 6, 2025, 7:27 AM
23.8 C
Chennai

கோடை விடுமுறை முடிந்து பெரும்பாலான பள்ளிகள் இன்று திறப்பு! மாணவர்கள் உற்சாகம்!

school - 2025

கோடை விடுமுறை முடிவடைந்து பெரும்பாலான இன்று பள்ளிகள் திறக்கப் பட்டன. இதை அடுத்து மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்குச் செல்ல காலை முதலே குவிந்தனர்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல்கள் பரவிக் கொண்டிருந்தன. இதனால் மாணவர்களும் பெற்றோரும் குழப்பத்தில் தவித்தனர்.

அவர்களது குழப்பத்துக்கு தெளிவு கிடைக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘மாணவர்கள் கல்வி நலனை கருத்தில் கொண்டு, திட்டமிட்டப்படி ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’ என்று அறிவித்தார்.

ஏற்கெனவே தேர்தலை முன்னிட்டு முன்னதாகவே தேர்வுகள் வைக்கப்பட்டு விடுமுறை விடப் பட்டது. இதனால் கோடை விடுமுறை நாட்கள் அதிகரித்தது.

இந்நிலையில் சுமார் 50 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியவுடனேயே விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படும் வேளையில், ஒரு சில தனியார் பள்ளிகள் வரும் 7-ஆம் தேதி வெள்ளிக்கிழமையிலும், சில தனியார் பள்ளிகள் 10-ஆம் தேதி திங்கள் கிழமையிலும் திறக்கப்படும் என்று அந்தந்த பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோர்களுக்கு கைபேசியில் குறுந்தகவல் அனுப்பியுள்ளன.

இன்னும் சீருடைகள் வழங்கபப்டுவதற்கு தயாராகாத நிலையில் கடந்த வருட சீருடைகளையே அணிந்து வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories