புது தில்லி: பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை அடுத்து, ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. அந்த ஜாமீனுக்கான காலக்கொடு வரும் 16ம் தேதியுடன் முடிகிறது. இதனால், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிக்குமாறு கோரி ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 17ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமது ஜாமீன் காலத்தை நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் ஏப். 17 நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
ஜெயலலிதா ஜாமீன் நாளையுடன் முடிகிறது: நீட்டிப்பு கோரி மனு தாக்கல்; 17ல் விசாரணை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari