எஸ்றா துர்குணம்… என்ன எகத்தாளம்..? தெனாவெட்டுக்கு தீர்ப்பு தெரியுமா?!

esra sargunam - 2026

இந்துக்கள் முகத்தில் குத்துங்கள் இன்று வன்முறையை தூண்டும் விதமாக பேசுகிறார் எஸ்றா சற்குணம்!

கிறிஸ்தவ பாதிரியாரான எஸ்ரா சற்குணம் அரசியலில் தீவிர திமுக ஆதரவாளராகவும் இயங்கி வருகிறார். இவர் இந்துக்கள் குறித்தும் இந்துத்துவ கோட்பாடுகள் குறித்தும் அவ்வப்போது மிக மோசமான   கருத்துகளை பேசி வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் !

ஒரு மாதத்துக்கு முன் வன்னியர் சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தைச் சொல்லி சிக்கினார். அதற்கு பெருமளவில் எதிர்ப்பு வந்தது! இந் நிலையில் தொடர்ந்து எஸ்ரா சற்குணம் இந்து மதம் பற்றியும் இந்துக்கள் குறித்தும் ஒரு மேடையில் பேசியுள்ளார்.

தற்போது, மூஞ்சில குத்து ரெண்டு குத்து ரத்தம் வரட்டும் என்று எஸ்றா சற்குணம் பேசிய அந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது!

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் குறிப்பாக வாட்ஸ் அப் வாயிலாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த வீடியோவில் இந்து மதம் ஒரு புனையப்பட்ட மதம்; அப்படி ஒரு மதமே கிடையாது! இதையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள் டாக்டர் பாபு வர்கீஸ் போன்றவர்களிடம் இருந்து நிறைய பாயிண்ட்ஸ் எடுத்து அவர்களிடத்தில் சொல்லுங்கள்! அப்படி ஒரு மதமே கிடையாது நீங்கள் யாரை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லுங்கள்! அவர்கள் ஏற்கவில்லை என்று சொன்னால், அவர்கள் முகத்தில் இரண்டு குத்துக்கள் விடுங்கள். பரவாயில்லை கடவுளே எங்களை மன்னித்து விடுங்கள் எனக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டது என்று சொல்லி முகத்தில் குத்தி ரத்தம் வருவது மாதிரி செய்து அதற்குப் பிறகு ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு விடுங்கள் தொடர்ந்து உங்கள் பணிகளை செய்யுங்கள் என்று பேசியுள்ளார்

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இவ்வாறு தொடர்ந்து இந்துக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும்; ரத்தக் கிளறியைக் கிளப்ப வேண்டும் என்று குறியாக இருந்து வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார் சற்குணம்

இதை அடுத்து எஸ்ரா சற்குணம் பேசிய பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கண்டனம் தெரிவித்தார்!

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த கண்டனத்தில்..

இந்துக்கள் முகத்தில் இரண்டு குத்து குத்து… ரத்தம் வரும்… என்று பேசிய வன்முறை பாதிரியார்  சற்குணத்துக்கு எதிராக தமிழக டிஜிபியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது இதேபோல் அவரவர் ஊர்களில் புகார் செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

இதை அடுத்து… தமிழக பாஜக சட்டப் பிரிவு செயலாளர் அஸ்வத்தாமன் டிஜிபியிடம் அளித்த புகார் மனுவில் எஸ்ரா சற்குணம் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசிவருகிறார்! கடந்த சில நாள்களுக்கு முன், குறிப்பிட்ட ஒரு ஜாதி குறித்து அவதூறாகப் பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார். அது குறித்து தமிழகம் முழுவதும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது!

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும் அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையிலும் மேடையில் பேசியுள்ளார்! அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவிவருகிறது! எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

இந்த வீடியோ தொடர்பாக சற்குணத்தை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, வீடியோவில் நான் பேசிய கருத்துக்கள் எல்லாம் உண்மை அது என்னுடைய தனிப்பட்ட கருத்து! இதை பல அறிஞர்களும் உறுதி செய்துள்ளனர்! இந்து என்பது ஒரு மதம் கிடையாது! ஒரு இடத்தைக் குறிக்கும் சொல்! இந்து மதம் அல்ல என்றார்!

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

சரி முகத்தில் குத்துங்கள் என்று கூறியுள்ளீர்கள் ஏன்? என்று கேட்டதற்கு, அதாவது பொதுவாக  பயன்படுத்தும் வார்த்தையை நாம் பயன்படுத்தியிருக்கிறேன்… என்றார்.

ரத்தம் வரட்டும் மன்னிப்பு கேட்கலாம் என்று பேசுகிறீர்களே என்று கேட்டபோது, அந்த மாதிரி நான் பேசல வீடியோவை மார்பிங் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார் !

முன்பு பேசியதெல்லாம் சரி என்றால் இது எப்படி வீடியோ மார்பிங் ஆகும் என்று கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் மழுப்பி விட்டார் எஸ்ரா சற்குணம்.

வீடியோ தொடர்பாக டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்களே என்று கேட்டதற்கு புகார் தானே..!  கொடுக்கட்டும் பார்த்துக்கிறேன்! என்று தெனாவட்டாக பதிலளித்தார்!

எஸ்றா சற்குணத்தின் தெனாவட்டுக்கு பின்னணியில் திமுக.,வும், சிறுபான்மை முகமூடியும் உள்ளதால், போலீஸில் புகார்கள் கொடுத்து எந்த பயனும் விளையப் போவதில்லை என்ற விரக்தி நிலைக்கு இந்து இயக்கத்தினர் வந்துள்ளனர்.

 

1 COMMENT

  1. கருணாநிதியின் கைக்கூலியாக செயல்பட்டு மேகலா தியேட்டர் அருகில் பெரிய நிலப் பரப்பை ஆட்டையைப் போட்டு அடந்த குறுகிய சாலையில் ஒவ்வொரு ஞ்சாயிரு அன்று மக்கள் போக்குவரத்தை சிரமமாக்கி வருபவர். பின்னர் எதிரில் உள்ள சுடுகாட்டு நிலத்தையும் அபகரித்து ‘போதனை’ செய்யும் இவரை எல்லாம் ஆன்மிகவாதியாக மட்டும் இல்லை, மனிதனாகவே எடுத்துக்கொள்ளக்க்கூடாது – அந்நிய நாட்டின் மதமாற்றம் செய்ய ‘ஆள் பிடிக்கும்’ ஏஜென்ட் தானே! ஏசுவே இவரை மன்னிக்கத் தயங்குவர்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories