December 6, 2025, 7:12 AM
23.8 C
Chennai

“ஸ்வாமிகள் எங்கே?”-தம்பதிகள்.

20fr_mahaperiyava10_634796g

“ஸ்வாமிகள் எங்கே?”-தம்பதிகள்.

“சுவாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன்.இருக்கும் இடம் தெரியவில்லை”-பெரியவா(பெரியவாளின் விளையாட்டு)

 

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பஞ்சாங்கத்தில் ‘வபன பௌர்ணமி’ என்று சில
பௌர்ணமி திதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகள் அன்றைய தினம்தான்
க்ஷவரம் (முடி மழித்தல்) செய்து கொள்வது
சம்பிரதாயம்.

ஒரு வபன பௌர்ணமியன்று மகா பெரியவாளுக்கு
கடுமையான காய்ச்சல்.அதனால் வபனம் செய்து
கொள்ளவில்லை.ஒரு வபன பௌர்ணமி தவறினால்,

அடுத்த வபன பௌர்ணமி வரை காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.காய்ச்சல் காரணமாக முடி மழித்துக் கொள்ளாததால்,பெரியவாளுக்கு தலைமுடியும், தாடியும் மிகவும் வளர்ந்துவிட்டன.அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில்,ஒரு மரத்தடியில்
அமர்ந்து பெரியவாள் ஜபம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது,ஒரு தம்பதிகள் அவசரமாக தரிசனத்துக்கு வந்தார்கள். ஏராளமான முடியுடனிருந்த பெரியவாளை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை

யாரோ ஒரு சந்நியாசி என்று நினைத்து அவர்களைப் பார்த்தே,”ஸ்வாமிகள் எங்கே?” என்று கேட்டார்கள்.

பெரியவாள் கொஞ்சமும் பதற்றப்படாமல்,
“சுவாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன். இருக்கும் இடம் தெரியவில்லை” என்று, இரு பொருள் தொனிக்கப் பதில் கூறினார்கள்.

வந்தவர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.
சுவாமிகளை தரிசிக்க வேண்டும் என்று ஆவலுடன் வந்தால், அவர் இருக்குமிடமே தெரியவில்லையாமே

எதிரே வந்த ஒரு தொண்டரிடம் விசாரித்தார்கள்.

 

அவர் மரத்தடியிலிருந்த பெரியவாளை சுட்டிக்காட்டி,
“அதோ இருக்காளே!” என்று கூறியதும்,தம்பதிகளுக்கு
உடல் வெலவெலத்து விட்டது.
“எவ்வளவு பெரிய அபசாரம் செய்துவிட்டோம்?”
என்று தவித்துக்கொண்டிருந்தபோது, பெரியவாளே
அவர்களை கூப்பிட்டு அருகில் உட்காரச் சொன்னார்கள்

“தாடி ரொம்பவும் வளர்ந்துபோச்சு! அதனாலே என்னை
அடையாளம் கண்டுபிடிக்க முடியல்லே! நான் தான்
உங்களை பயமுறுத்தியிருக்கேன்! பரவாயில்லை…”
என்று அவர்களுக்கு மனத்திருப்தி ஏற்படும் வரை
சமாதானமாகப் பேசி,பிரசாதம் கொடுத்தார்கள்.

பெரியவாளுக்கு இந்த மாதிரி விளையாட்டெல்லாம்
ரொம்ப பிடிக்கும்.

அவைகளைக் கண்டு ரசிக்க, அணுக்கத்

தொண்டர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்!

நமக்கும்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories