February 22, 2026, 4:02 AM
25.6 C
Chennai

காஞ்சியில் கடும் நெரிசல்: பக்தர்கள் 15 பேர் மயக்கம்!

athivaratharcrowd - 2026

காஞ்சிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். அத்திவரதரை தரிசிக்க சென்ற 15 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க, விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை இன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்துள்ளனர். இதனால் காஞ்சி நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயிலிலும் பக்தர்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.

அத்திவரதர் இன்று இளம் நீலநிறப் பட்டாடையில் தரிசனம் தருகிறார். விடுமுறை நாளான ஞாயிறு மற்றும் ஏகாதசி தினம் என்பதால், இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலில் பெரும் வரிசையில் காத்திருக்கின்றனர்.

athivarathar crowd - 2026கடந்த 27 நாட்களில் சுமார் 36 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். சனி, ஞாயிறு தினங்களில் சராசரியாக 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனத்துக்காகக் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதலே சுமார் 3 கிமீ., தொலைவு வரை பக்தர்கள் நீண்ட வரிசைஇல் 4 மணி நேரமாக காத்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் விரைந்து தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தகவல் தெரிவித்த காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, ”2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இன்று குவிந்துள்ளதால் பக்தர்கள் பொறுமையுடன் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க வேண்டும். மாவட்ட எல்லையிலும் பக்தர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்று கோரினார்.

இந்நிலையில், இன்று காலை கூட்ட நெரிசலில் சிக்கி, பக்தர்கள் 15 பேர் மயக்கம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories