December 6, 2025, 4:37 AM
24.9 C
Chennai

காஞ்சியில் கடும் நெரிசல்: பக்தர்கள் 15 பேர் மயக்கம்!

athivaratharcrowd - 2025

காஞ்சிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். அத்திவரதரை தரிசிக்க சென்ற 15 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க, விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை இன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்துள்ளனர். இதனால் காஞ்சி நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயிலிலும் பக்தர்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.

அத்திவரதர் இன்று இளம் நீலநிறப் பட்டாடையில் தரிசனம் தருகிறார். விடுமுறை நாளான ஞாயிறு மற்றும் ஏகாதசி தினம் என்பதால், இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலில் பெரும் வரிசையில் காத்திருக்கின்றனர்.

athivarathar crowd - 2025கடந்த 27 நாட்களில் சுமார் 36 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். சனி, ஞாயிறு தினங்களில் சராசரியாக 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனத்துக்காகக் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதலே சுமார் 3 கிமீ., தொலைவு வரை பக்தர்கள் நீண்ட வரிசைஇல் 4 மணி நேரமாக காத்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் விரைந்து தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தகவல் தெரிவித்த காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, ”2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இன்று குவிந்துள்ளதால் பக்தர்கள் பொறுமையுடன் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க வேண்டும். மாவட்ட எல்லையிலும் பக்தர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்று கோரினார்.

இந்நிலையில், இன்று காலை கூட்ட நெரிசலில் சிக்கி, பக்தர்கள் 15 பேர் மயக்கம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories