தலை ஆவணி அவிட்டம் வரைக்குமாவது உன் பிள்ளையை தினமும் சமிதாதானம் பண்ணச் சொல்லு

12957391_1335113029837652_1819172567_n

“தலை ஆவணி அவிட்டம் வரைக்குமாவது உன் பிள்ளையை தினமும் சமிதாதானம் பண்ணச் சொல்லு. ஒவ்வொரு நாளும் மூணு வேளை சந்தியாவந்தனம் பண்றதை எப்போதும் கடைப்பிடிக்கச் சொல்லு.”
 
சொன்னவர்-பி.ராமகிருஷ்ணன்
 
நன்றி-பால ஹனுமான்.&குமுதம் பக்தி ஸ்பெஷல்
.
 
 
மகா பெரியவாளைப் பற்றி எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம், அவர் சன்யாச தர்மத்தில் இருந்து ஒரு துளிகூட தவறாம இருந்தவர்ங்கறது.
 
 
 
தான் கடைப்பிடிச்ச மாதிரியே எல்லாரும் அவரவர்க்கு உரிய குலதர்மத்தை தவறாம கடைப்பிடிக்கணும்னு எப்போதுமே அவர் சொல்லுவார்.
 
 
 
எனக்கு உபநயனம் நடந்து முடிஞ்சதும் நாங்க எல்லாரும் ஆசார்யாள் கிட்ட ஆசி வாங்கிக்கறத்துக்காக காஞ்சிபுரத்துக்குப் போயிருந்தோம். அப்போ, “தலை ஆவணிஅவிட்டம் வரைக்குமாவது உன் பிள்ளையை தினமும் சமிதாதானம் பண்ணச் சொல்லு. ஒவ்வொரு நாளும் மூணு வேளை சந்தியாவந்தனம் பண்றதை எப்போதும் கடைப்பிடிக்கச் சொல்லு. உன்னால முடிஞ்ச சமயத்துல எல்லாம் அவனுக்கு வேத மந்திரங்களைச் சொல்லிக் கொடு!” அப்படீன்னு சொல்லிட்டு என்னை ஆசீர்வதிச்சார்.
 
 
 
பரமாச்சார்யார் சொன்ன மாதிரியே எனக்கு வேதங்களை சொல்லித் தர ஆரம்பிச்சார் அப்பா. அந்த சமயத்துல ஒரு நாள் நான் விளையாட்டா சிவலிங்க பூஜை செய்ய ஆரம்பிச்சேன். இதை யாரும் பெரிசா எடுத்துக்கலை.
 
 
 
பட்டப் படிப்பை முடிச்சுட்டு மேற்படிப்புக்காக நான் விண்ணப்பிக்க இருந்த சமயம், என்னோட அப்பாவும் அம்மாவும் வழக்கம் போல பரமாச்சாரியா தரிசனத்துக்காக காஞ்சீபுரம் போயிருக்காங்க. வழக்கப்படி ஆசீர்வதிச்ச மகா பெரியவர், மடத்துல இருந்த ஒருத்தரைக் கூப்பிட்டு, ருத்ராட்ச மாலை ஒன்றை எடுத்துக் கொண்டு வரச் சொல்லியிருக்கார்.
 
 
 
அவர் கொண்டு வந்த ருத்ராட்ச மாலையை எங்க அப்பா கிட்ட குடுத்து, “உன் மகன் சிவ பூஜை எல்லாம் செய்யறான் போலிருக்கே… அவன் பூஜை பண்ற சமயத்துல இதைப் போட்டுக்கச் சொல்லு!” அப்படீன்னு சொல்லியிருக்கார்.
 
 
 
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஒரு பக்கம் ஆனந்தம், மறு பக்கம் ஆச்சரியம்! ‘நம்ப மகன் சிவ பூஜை செய்யறதை நாம பெரிசாவே எடுத்துக்கலை. அதை பெரியவா கிட்ட சொல்லவும் இல்லை. ஆனா, அவராகவே தெரிந்து கொண்டு, ஆசீர்வாதமும் செய்திருக்கார்னா அது எவ்வளவு பெரிய பாக்கியம்!’ இப்படி நினைத்துக் கொண்டே ஆசார்யாள் தந்த ருத்ராட்ச மாலையை மகா பிரசாதமாக நினைத்து எடுத்துக் கொண்டு வந்தவர்களுக்கு இன்னொரு ஆச்சரியம் காத்துக் கொண்டு இருந்தது.
 
 
 
அவங்க கையில இருந்த ருத்ராட்ச மாலையைப் பார்த்த மடத்து சிப்பந்தி ஒருத்தர், “அடடே…இது பிரதோஷ காலத்துல பிரத்யேக பூஜை பண்ற சமயத்துல பெரியவா போட்டுக்கற ருத்ராட்ச மாலை ஆச்சே…! இதை உங்களுக்குத் தந்திருக்கார்னா பெரிய பாக்யம் தான்!” னு சொன்னாராம்.
 
 
 
அந்த ருத்ராட்ச மாலையை இன்றைக்கும் நான் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். தினம்தினம் முறைப்படி பஞ்சாயதன பூஜை பண்ணும்போது அதைப் போட்டுக் கொள்கிறேன்.
 
 
 
நான் கேட்காமலே இப்படி ருத்ராட்ச மாலையைத் தந்த மகான், எத்தனையோ தெய்வீக நிகழ்வுகளை நிகழ்த்தியிருக்கிறார்
ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories