December 5, 2025, 8:51 AM
24.9 C
Chennai

விநாயக சதுர்த்தி: அம்பாளின் புன்னகையில் இருந்து கணபதி தோன்றினாரா?

vinayakar-pooja2
vinayakar-pooja2

விநாயக சதுர்த்தி: ஆன்மீக கேள்வி பதில்

கேள்வி: ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் அம்பாளின் புன்னகையில் இருந்து கணபதி தோன்றியதாக உள்ளது. இதன் பொருள் என்ன?

பதில்: கணபதியின் தோற்றத்திற்கு தொடர்பான பல கதைகள் புராணங்களில் உள்ளன. இவற்றை உபாசனை ரகசியங்கள் என்று கூறுவர். இவை சாதாரண கதைகளோ வரலாறுகளோ அல்ல. உபாசனையின் முக்கியத்துவத்தை குறிப்பிடுவதற்கு ஒவ்வொரு கதையும் தோன்றியது. புராண கதைகள், மந்திர குறியீடுகள், யக்ஞ சங்கேதங்கள், யோகக் குறியீடுகள் ஜோதிடக் குறியீடுகள் அனைத்தும் இவற்றுள் உள்ளன.

ஸ்ரீவித்யா உபாசனையில் கணபதி பற்றி கூறுகையில் அம்பாளின் சிரிப்பில் இருந்து கணபதி தோன்றிய அம்சம் விவரிக்கப்பட்டுள்ளது.

காமேஸ்வர முகாலோக கல்பிதஶ்ரீ கணேஸ்வரா மகாகணேச நிர்பின்ன விக்ன யந்த்ர பிரகர்ஷிதா

-என்று லலிதா சகஸ்ரநாமத்தில் இரு நாமங்கள் உள்ளன.

லலிதா பரமேஸ்வரி பண்டாசுரனோடு போர் புரிகையில் விசுக்கிரன் என்ற பண்டாசுரனின் அமைச்சனும் சகோதரனும் ஜெய விக்ன சிலா யந்த்ரம் என்ற விக்ன யந்திரத்தை தன் க்ஷுத்ர பிரயோகத்தால் உருவாக்கி சக்தி சேனைகளின் மீது ஏவினான். அதனை உடைத்து எறிவதற்கு அம்மனின் சிரிப்பில் இருந்து கணபதி அவதரித்தார் என்று பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.

அந்தச் சிரிப்பு எப்படி பட்டது? அங்கிருந்த சிவகாமேஸ்வரனைப் பார்த்து லலிதா பரமேஸ்வரி புன்னகை புரிந்தாள். அதாவது கணவரைப் பார்த்ததும் அம்மனுக்கு ப்ரீத்தி பாவனை ஏற்பட்டது. சிவனின் பதில் புன்னகையால் அது மேலும் அபிவிருத்தியானது. அம்பாளின் புன்னகையில் இரு பாவனைகள் உள்ளன.

சுவாமியைப் பார்த்ததும் ஏற்பட்ட அன்பு. சுவாமியின் பதில் புன்னகையைப் பார்த்ததும் ஏற்பட்ட பேரன்பு. பரஸ்பர பிரேமை பாவனை புன்னகை வடிவில் வெளிப்பட்டது. அந்த புன்னகையில் சிவன் சக்தி என்ற இரு தத்துவங்களும் இணைந்து உள்ளன. அந்த புன்னகையில் இருந்து கணபதி அவதரித்தார். அதனால் சிவ, சக்திகளின் ஏக சொரூபம் கணபதி.

புன்னகை எப்போதும் ஆனந்தத்திற்கு குறியீடு. அதனால் கணபதி ஆனந்த மூர்த்தி. நவரசங்களில் ஹாஸ்ய ரசத்திற்கு அதிபதி கணேசர். ஏனென்றால் துயரம் துன்பம் என்பவையே தடைகள். இந்த விக்னங்களை விலக்கி மகிழ்ச்சி அளிப்பதே கணபதியின் வடிவத்தில் உள்ள பொருள்.

கணபதி என்றாலே ஆனந்த சொரூபம். கணபதி சிவனின் கோபத்தைக் கூட விலக்கி விடக் கூடியவர். பராசக்தியான சித் சக்தியின் ஆனந்த தத்துவமே கணபதியாக வெளிப்பட்டது என்ற குறியீட்டு அர்த்தமே இந்த கதையின் தாத்பரியம்.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories