விநாயக சதுர்த்தி: அம்பாளின் புன்னகையில் இருந்து கணபதி தோன்றினாரா?

vinayakar-pooja2
vinayakar-pooja2

விநாயக சதுர்த்தி: ஆன்மீக கேள்வி பதில்

கேள்வி: ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் அம்பாளின் புன்னகையில் இருந்து கணபதி தோன்றியதாக உள்ளது. இதன் பொருள் என்ன?

பதில்: கணபதியின் தோற்றத்திற்கு தொடர்பான பல கதைகள் புராணங்களில் உள்ளன. இவற்றை உபாசனை ரகசியங்கள் என்று கூறுவர். இவை சாதாரண கதைகளோ வரலாறுகளோ அல்ல. உபாசனையின் முக்கியத்துவத்தை குறிப்பிடுவதற்கு ஒவ்வொரு கதையும் தோன்றியது. புராண கதைகள், மந்திர குறியீடுகள், யக்ஞ சங்கேதங்கள், யோகக் குறியீடுகள் ஜோதிடக் குறியீடுகள் அனைத்தும் இவற்றுள் உள்ளன.

ஸ்ரீவித்யா உபாசனையில் கணபதி பற்றி கூறுகையில் அம்பாளின் சிரிப்பில் இருந்து கணபதி தோன்றிய அம்சம் விவரிக்கப்பட்டுள்ளது.

காமேஸ்வர முகாலோக கல்பிதஶ்ரீ கணேஸ்வரா மகாகணேச நிர்பின்ன விக்ன யந்த்ர பிரகர்ஷிதா

-என்று லலிதா சகஸ்ரநாமத்தில் இரு நாமங்கள் உள்ளன.

லலிதா பரமேஸ்வரி பண்டாசுரனோடு போர் புரிகையில் விசுக்கிரன் என்ற பண்டாசுரனின் அமைச்சனும் சகோதரனும் ஜெய விக்ன சிலா யந்த்ரம் என்ற விக்ன யந்திரத்தை தன் க்ஷுத்ர பிரயோகத்தால் உருவாக்கி சக்தி சேனைகளின் மீது ஏவினான். அதனை உடைத்து எறிவதற்கு அம்மனின் சிரிப்பில் இருந்து கணபதி அவதரித்தார் என்று பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

அந்தச் சிரிப்பு எப்படி பட்டது? அங்கிருந்த சிவகாமேஸ்வரனைப் பார்த்து லலிதா பரமேஸ்வரி புன்னகை புரிந்தாள். அதாவது கணவரைப் பார்த்ததும் அம்மனுக்கு ப்ரீத்தி பாவனை ஏற்பட்டது. சிவனின் பதில் புன்னகையால் அது மேலும் அபிவிருத்தியானது. அம்பாளின் புன்னகையில் இரு பாவனைகள் உள்ளன.

சுவாமியைப் பார்த்ததும் ஏற்பட்ட அன்பு. சுவாமியின் பதில் புன்னகையைப் பார்த்ததும் ஏற்பட்ட பேரன்பு. பரஸ்பர பிரேமை பாவனை புன்னகை வடிவில் வெளிப்பட்டது. அந்த புன்னகையில் சிவன் சக்தி என்ற இரு தத்துவங்களும் இணைந்து உள்ளன. அந்த புன்னகையில் இருந்து கணபதி அவதரித்தார். அதனால் சிவ, சக்திகளின் ஏக சொரூபம் கணபதி.

புன்னகை எப்போதும் ஆனந்தத்திற்கு குறியீடு. அதனால் கணபதி ஆனந்த மூர்த்தி. நவரசங்களில் ஹாஸ்ய ரசத்திற்கு அதிபதி கணேசர். ஏனென்றால் துயரம் துன்பம் என்பவையே தடைகள். இந்த விக்னங்களை விலக்கி மகிழ்ச்சி அளிப்பதே கணபதியின் வடிவத்தில் உள்ள பொருள்.

கணபதி என்றாலே ஆனந்த சொரூபம். கணபதி சிவனின் கோபத்தைக் கூட விலக்கி விடக் கூடியவர். பராசக்தியான சித் சக்தியின் ஆனந்த தத்துவமே கணபதியாக வெளிப்பட்டது என்ற குறியீட்டு அர்த்தமே இந்த கதையின் தாத்பரியம்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories