நவராத்திரி ஸ்பெஷல்: நவதுர்க்கைகளில் சைலபுத்ரியின் சிறப்பு என்ன?

Published:

srishailaputri
srishailaputri

நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!

கேள்வி: நவதுர்க்கைகளில் சைலபுத்ரியின் சிறப்பு என்ன?

பதில்: வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த  க்ருத சேகராம் !வ்ருஷபாரூடாம் சூலதரீம் சைலபுத்ரீம் மஹேஸ்வரீம் !! என்பது சைல புத்ரியின் தியான ஸ்லோகம்.

ஜெகதாம்பாள் பார்வதி தேவியாக அவதரித்த சொரூபமே சைலபுத்ரி. சைலம் என்றால் பர்வதம் மலை. புத்ரி என்றால் குமாரி, மகள். பர்வத புத்ரீ என்றால் பார்வதி. உலகைக் காப்பதற்காக அம்பாள் ஏற்றுக்கொண்ட திவ்ய ரூபம் இது. 
பார்வதி என்பவள் மகா சக்தி ஸ்வரூபம். கோடிக்கணக்கான சக்திகளின் ஒரே வடிவம் சைலபுத்ரி ஸ்வரூபம். 

இந்த தேவதையின் வழிபாடு ஞான சக்தியை அளிக்கிறது. அதர்மத்தை தண்டிக்கும் போது உக்ர ரூபம் எடுக்கிறாள்.  பராக்கிரமம், பிரசாதம் இரண்டும் ஒன்றிணைந்த சொரூபமே சைலபுத்ரி

துர்கா என்றால் ரட்சணை சக்தி. துர்க்கை ஸ்வரூபமே பார்வதிதேவி. இந்த தேவியை சரண் அடைவதன் மூலம் பாதுகாப்பு கிடைக்கப் பெறுகிறோம்.
ஹிமவானுக்கும் மேனா தேவிக்கும் பூரணமாக  அவதரித்த பிரதம வடிவமே பார்வதி.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!
srishailaputri1
srishailaputri1

சைலபுத்ரி என்பது நவ துர்கைகளில் முதல் சொரூபம். நம் உடலில் மூலாதாரத்திற்கு அதிஷ்டான தேவதை இவள். ஏனென்றால் சைலம் என்பது ப்ருத்வி தத்துவம். அதன் சொரூபமே மூலாதாரம். 

நவ துர்க்கைகளின் வழிபாடு என்பது ஒவ்வொரு சக்கரத்திலும் இருக்கும் பராசக்தியின் வழிபாடு.

 யோகம் குறித்த புரிதல் இல்லாதவர்கள் கூட துர்கை சக்திகளை வழிபட்டு வந்தால் அந்தந்த சக்கரங்களில் உள்ள திவ்ய சக்திகள் விழிப்படைந்து தெய்வீகம் கிடைக்கப் பெறும் என்பது உட்பொருள்.

சைலபுத்ரி பரமேஸ்வரனைக் குறித்து தவம் செய்யும் கோலத்தில் இருக்கிறாள்.
‘தாமக்னி வர்ணாம் தபசா ஜ்வலந்தீம் வைரோசனீம் கர்ம பலேஷு ஜுஷ்டாம்’  என்று கூறுகிறாற்போல… தவச் சக்திக்கும்  ஞான சக்திக்கும் அடையாளமாக விளங்குகிறாள். சைலபுத்ரியை வழிபடுவதால் ஞானம், தியானம், சாந்தம், பாதுகாப்பு  போன்றவற்றை அருளுகிறாள்.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா. 
தமிழில்: ராஜி ரகுநாதன்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img