நவராத்திரி ஸ்பெஷல்: நவதுர்க்கைகளில் சைலபுத்ரியின் சிறப்பு என்ன?

srishailaputri
srishailaputri

நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!

கேள்வி: நவதுர்க்கைகளில் சைலபுத்ரியின் சிறப்பு என்ன?

பதில்: வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த  க்ருத சேகராம் !வ்ருஷபாரூடாம் சூலதரீம் சைலபுத்ரீம் மஹேஸ்வரீம் !! என்பது சைல புத்ரியின் தியான ஸ்லோகம்.

ஜெகதாம்பாள் பார்வதி தேவியாக அவதரித்த சொரூபமே சைலபுத்ரி. சைலம் என்றால் பர்வதம் மலை. புத்ரி என்றால் குமாரி, மகள். பர்வத புத்ரீ என்றால் பார்வதி. உலகைக் காப்பதற்காக அம்பாள் ஏற்றுக்கொண்ட திவ்ய ரூபம் இது. 
பார்வதி என்பவள் மகா சக்தி ஸ்வரூபம். கோடிக்கணக்கான சக்திகளின் ஒரே வடிவம் சைலபுத்ரி ஸ்வரூபம். 

இந்த தேவதையின் வழிபாடு ஞான சக்தியை அளிக்கிறது. அதர்மத்தை தண்டிக்கும் போது உக்ர ரூபம் எடுக்கிறாள்.  பராக்கிரமம், பிரசாதம் இரண்டும் ஒன்றிணைந்த சொரூபமே சைலபுத்ரி

துர்கா என்றால் ரட்சணை சக்தி. துர்க்கை ஸ்வரூபமே பார்வதிதேவி. இந்த தேவியை சரண் அடைவதன் மூலம் பாதுகாப்பு கிடைக்கப் பெறுகிறோம்.
ஹிமவானுக்கும் மேனா தேவிக்கும் பூரணமாக  அவதரித்த பிரதம வடிவமே பார்வதி.

srishailaputri1
srishailaputri1

சைலபுத்ரி என்பது நவ துர்கைகளில் முதல் சொரூபம். நம் உடலில் மூலாதாரத்திற்கு அதிஷ்டான தேவதை இவள். ஏனென்றால் சைலம் என்பது ப்ருத்வி தத்துவம். அதன் சொரூபமே மூலாதாரம். 

நவ துர்க்கைகளின் வழிபாடு என்பது ஒவ்வொரு சக்கரத்திலும் இருக்கும் பராசக்தியின் வழிபாடு.

 யோகம் குறித்த புரிதல் இல்லாதவர்கள் கூட துர்கை சக்திகளை வழிபட்டு வந்தால் அந்தந்த சக்கரங்களில் உள்ள திவ்ய சக்திகள் விழிப்படைந்து தெய்வீகம் கிடைக்கப் பெறும் என்பது உட்பொருள்.

சைலபுத்ரி பரமேஸ்வரனைக் குறித்து தவம் செய்யும் கோலத்தில் இருக்கிறாள்.
‘தாமக்னி வர்ணாம் தபசா ஜ்வலந்தீம் வைரோசனீம் கர்ம பலேஷு ஜுஷ்டாம்’  என்று கூறுகிறாற்போல… தவச் சக்திக்கும்  ஞான சக்திக்கும் அடையாளமாக விளங்குகிறாள். சைலபுத்ரியை வழிபடுவதால் ஞானம், தியானம், சாந்தம், பாதுகாப்பு  போன்றவற்றை அருளுகிறாள்.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா. 
தமிழில்: ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories