நவராத்திரி ஸ்பெஷல்: வாராஹி தேவியின் சிறப்பு என்ன?

Published:

srivarahi-amman
srivarahi-amman

நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில் – 10

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி  ரகுநாதன்

கேள்வி: வாராஹி தேவியின் சிறப்பு என்ன?

பதில்: சப்தமாதர்களில் ஐந்தாவது மாதா வாராகி தேவி. அதனால் பஞ்சமி தேவியாக அறியப்படுகிறாள். அதோடுகூட லலிதா உபாசனையில் வாராஹி தேவிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது.

‘கிரிசக்ர ரதா ரூடா  தண்டநாதா புரஸ்க்ருதா’ என்பது லலிதா நாமம். கிரி சக்கரம் என்றால் வராஹங்களால் ஆன யந்த்ரம்.  
வராஹ ரூபிணீ சக்தியாக ஆதி வராஹ ரூபம்  கொண்டாள் ஜெகதாம்பாள்.  

வாராகி அம்மன் ‘ அன்னப் பிரதாயக சக்தி’.  ப்ருத்வியைத் தாங்குபவள். அதாவது பூமியில் போஷக சக்தியாக விளங்கி சர்வ ஜகத்திற்கும் உணவளிப்பவள்.  ‘தண்டநாதா’ என்று கூறப்படுவதால் இவள் ரக்ஷணை சக்தியும் கூட. உணவும் பாதுகாப்பும் அளிக்கும் இரு சொரூபங்கள் வாராகி தேவி உபாசனையில் காணப்படுகின்றன.

வாராஹி உபாசனையால்  நமக்கு உணவு குறைவின்றி கிடைக்கிறது. பாதுகாப்பும் கிடைக்கிறது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

லலிதா தேவி பண்டாசுர வதம் புரிந்த போது தேவியின் சேனைகளுக்கு தலைமை தாங்கியவள் வாராகி அம்மன்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img