ஒரே ஹீரோவோடு… அக்கா தங்கை இருவரும்! இரண்டு படங்களில்!

Published:

rajasekar-daughters
rajasekar-daughters

அக்கா தங்கை இருவரும் ஒரே ஹீரோவோடு இரண்டு திரைப்படங்களில் நடிக்கிறார்கள்.

ஆங்க்ரி யெங் மேன் ராஜசேகரின் பெண்கள் சிவானி, சிவாத்மிகா ஹீரோயின்களாக வெற்றி பெறுவதற்கு முயற்சித்து வருகிறார்கள். அக்கா தங்கை இருவரும் ஒரே ஹீரோவோடு இரண்டு திரைப்படங்களில் நடிக்கிறார்கள். தாயைப் போலவே தாமும் கூட நல்ல ஹீரோயினாக அடையாளம் காணப்பட வேண்டும் என்று முயற்சித்து வருகிறார்கள்.

சிவானி, அடவி சேஷ் என்ற நடிகருடன் ஜோடியாக ஒரு ஹிந்தி ரீமேக்கில் நடித்தார். ஆனால் அந்த சினிமா நின்றுபோனது.

ராஜசேகரின் சிறிய மகள் சிவாத்மிகா சுரேஷ் ப்ரொடக்ஷனில் தொரசானி சினிமாவில் ஹீரோயினாக திரையில் அரங்கேற்றம் செய்து நடிகையாக நல்ல மார்க்கு வாங்கி விட்டார். கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா சினிமாவில் கூட நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அக்கா சிவானி மட்டும் நல்ல என்ட்ரி கொடுக்க எதிர்பார்த்திருக்கிறார். இந்த பின்னணியில் இளம் ஹீரோ அதிதி அருணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து ரசிகர்களின் முன் வருவதற்கு தயாராக உள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

கேமராமேனாக தனக்கென்று ஒரு சிறந்த அடையாளத்தை பெற்றுள்ள கேவி குஹன் 118 திரைப்படத்தால் இயக்குனராக மாறியுள்ளார். ஆனால் அந்த படம் நினைத்தபடி ஹிட்டாகவில்லை. இந்த பின்னணியில் இந்த முறை சிறிய சினிமா எடுக்க திட்டமிட்டு அதில் அதிதி அருண், சிவானி ராஜசேகர் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த சினிமா கூட முன்னைப் போலவே ஆகாமல் டெக்னோ திரில்லர் ஜானரில் திரையில் வர உள்ளது. சூட்டிங் முடிந்து போன நிலையில் உள்ளது.

அதிதி அருணோடு ஜோடியாக ராஜசேகரின் சிறிய மகள் சிவாத்மிகா விதி விலாசம் என்ற சினிமாவில் நடிக்கிறார். இந்த சினிமா விரைவில் வர உள்ளது.

ஒரே ஹீரோவோடு ராஜசேகரின் இரு மகள்களும் பேக் டு பேக் திரைப்படம் செய்வது சிறப்பாக பேசப்படுகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img