திருப்புகழ் கதைகள்: தொழுநோய் அறிவியல்!

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 69
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தொழுநோய் அறிவியல் செய்திகள் – பகுதி 1

தொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். இந்த நோய் கடுமையான தோல் அழற்சியை ஏற்படுத்துகிறது. மற்றும் கை, கால் சருமத்தின் இதர பகுதிகளில் நரம்புகளில் சேதம் உண்டாக்குகிறது. தொழுநோய் பற்றி பயத்தை உண்டாக்கும் பல வித கதைகள் நமது வரலாற்றில் உண்டு. நீண்ட நெடுங்காலமாக இந்த பாதிப்பு பல்வேறு எதிர்மறை களங்கத்துடன் மனித இனத்தை பயமுறுத்தி வருகிறது.

தொழு நோயின் தாக்கம் மற்றும் அதன் விளைவுகள் ஒவ்வொரு கண்டத்தில் உள்ள மனிதர்களையும் பாதித்து வருகிறது. சீனா, எகிப்து மற்றும் இந்தியாவின் பண்டைய நாகரீகங்களில் தொழுநோய் என்பது மருந்து இல்லாத, உரு சிதைக்கும், தொற்று நோயாக இருந்து வந்தது. இருப்பினும் தொழு நோய் என்பது பயப்படும் அளவிற்கு தொற்று நோயல்ல.

தொழு நோய்க்கு சிகிச்சை எடுக்காமல் இருக்கும் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருத்தல் மற்றும் அவரின் மூக்கு மற்றும் வாயில் இருந்து வடியும் நீர் ஒருவர் சருமத்தில் அடிக்கடி படும்போது தொழு நோய் பரவும் வாய்ப்புள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை இந்த நோய் அதிகம் பாதிக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் உள்ள தொழு நோயாளிகள் எண்ணிக்கை 1,80,000 ஆகும். அதிலும் ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 100 பேர் தொழுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

அதிலும் அதிகமாக தெற்கு பகுதியில், கலிபோர்னியா, ஹவேலி, மற்றும் இதர மாகாணங்களில் அதிக மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மெதுவாக வளரும் பக்டீரியா வகையைச் சேர்ந்த மைகோபக்டீரியம் லேப்ரே என்ற பாக்டீரியா தொழுநோய்க்கு காரணமாக உள்ளது. 1873இல் M.லேப்ராவை கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயரால், தொழுநோய் ஹான்ஸென் நோய் என்றும் அறியப்படுகிறது.

arunagiri muruga peruman
arunagiri muruga peruman

தொழுநோய் முதன்மையாக சருமத்தை பாதிக்கிறது. மூளைக்கு வெளிப்புறம் உள்ள நரம்புகளையும், முதுகுத்தண்டையும் பாதிக்கிறது. தொழுநோய் கைகளையும் பாதிக்கலாம் மற்றும் மூக்கின் மெல்லிய திசுக்களையும் பாதிக்கலாம். உருச்சிதைக்கும் சரும புண், கட்டிகள், பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆனாலும் கரையாத புடைப்பு போன்றவை தொழுநோயின் முக்கிய அறிகுறியாகும்.

சருமத்தில் உள்ள புண் வெளிர் நிறத்தில் காணப்படும். கை மற்றும் கால்களில் உணர்வு இழப்பு ஏற்படலாம். தசைகள் பலவீனமாகலாம். தொழுநோய் தாக்கும் பாக்டீரியாவுடன் தொடர்பு ஏற்பட்டு 3 முதல் 5 வருடம் கழித்தே நோய் தாக்கத்திற்கான அறிகுறிகள் தென்படும்.

சில மனிதர்களுக்கு 20 வருடத்திற்கு பின்னும் அறிகுறிகள் தென்படாது. பாக்டீரியாவுடன் தொடர்பு ஏற்பட்ட காலம் மற்றும் அறிகுறிகள் தென்படும் காலம் ஆகிய இரண்டுக்கும் இடையான காலத்தை இன்குபேஷன் அதாவது அடைகாக்கும் காலம் என்று கூறுகின்றனர். இந்த அடை காக்கும் காலம் நீடித்து இருக்கும் போது ஒரு மனிதனுக்கு எப்போது எந்த இடத்தில் தொழு நோய் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தீர்மானிக்க முடியாத நிலை மருத்துவர்களுக்கு உண்டாகிறது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

சருமத்தில் உண்டாகும் புண்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளைப் பொறுத்து தொழு நோய் வகை தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட வகை தொழு நோய்க்கும் அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் வேறுபடுகின்றன. தொழு நோயின் வகைகள் பற்றி இப்போது காணலாம்.

ட்யுபர்குலைடு : இது ஒரு மிதமான, குறைவான தீவிர நிலையைக் கொண்ட ஒரு வகை தொழுநோய். இந்த வகை தொழு நோய் பாதிக்கபட்டவர்களுக்கு ஒன்று அல்லது ஒரு சில தழும்புகள் மட்டுமே இருக்கும், அந்த தழும்புகள் வெளிர் நிறத்தில் இருக்கும்.

சருமத்திற்கு அடியில் உள்ள நரம்புகளில் சேதம் ஏற்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட சருமத்தில் உணர்வு அற்று மரத்துப்போன நிலை இருக்கும். மற்ற வகை தொழுநோயை விட இந்த வகை தொழுநோயில் பரவும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.

இன்னும் சில தொழுநோய் வகைகள் உள்ளன. அவற்றை நாளைக் காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories