ஆரோக்கிய சமையல்: சாமை காரக் கொழுக்கட்டை!

samai kara kozukattai
samai kara kozukattai

சாமை காரக் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
சாமை அரிசி – 150 கிராம் (1½ பங்கு)
துவரம் பருப்பு – 25 கிராம் ( ¼ பங்கு)
கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் – ¼ மூடி (மீடியம் சைஸ்)
இஞ்சி – பாதி சுண்டுவிரல் அளவு
கல் உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
தண்ணீர் – 200 மில்லி லிட்டர் (2 பங்கு)
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கீற்று
பெருங்காயப் பொடி – ½ ஸ்பூன்

செய்முறை
முதலில் சாமையை வெறும் வாணலியில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடங்கள் வறுக்கவும். துவரம் பருப்பை சிவக்க வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.

சாமை மற்றும் துவரம் பருப்பு ஆகியவை ஆறியவுடன் மிக்ஸியில் தனித்தனியே கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். கடலைப் பருப்பை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். கறிவேப்பிலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடிகனமான வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயப் பொடி சேர்த்து தாளிதம் செய்யவும்.

பின் அதனுடன் துருவிய தேங்காய், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

கலவை நன்கு வதங்கியதும் கொர கொரப்பாக அரைத்த சாமை மற்றும் துவரம் பருப்பு, ஊற வைத்த கடலைப்பருப்பு ஆகியவற்றுடன் சேர்த்து ஒரு சேரக் கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 200 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி அத்துடன் கல் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்ததும் மாவுக் கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி கிளறி ஒரு சேரத் திரட்டவும். பின் அதிலிருந்து தேவையான அளவு மாவினை எடுத்து கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும். பின்னர் கொழுக்கட்டைகளை இட்லி பானையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான சாமை காரக் கொழுக்கட்டை தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories