வாய்ப்பை தவறவிட்ட நியூசிலாந்து; சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா!

australia champions
australia champions

முனைவர் கு.வை பாலசுப்பிரமணியன் –

ஐ.சி.சி. டி20 போட்டி – இறுதி ஆட்டம்
ஆஸ்திரேலியா கோப்பை வென்றது
நியூசிலாந்து பரிதாப தோல்வி

இன்று துபாய் இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஐ.சி.சி. டி20 கோப்பையை வென்றது. பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை மட்டையாடச் சொன்னது.

முதல் பத்து ஓவர்களை நியூசிலாந்து அணி சரியாக விளையாடவில்லை. இந்த ஐ.சி.சி. டி20 போட்டியில் நியூசிலாந்து அணி முதல் பத்து ஓவர்களில் எடுத்த குறைவான ஸ்கோர் (57/1) இதுதான். நான்காவது ஓவரின் கடைசி பந்தில் தொடக்க வீரர் டரில் மிட்சல் (8 பந்தில் 11 ரன்) ஆட்டமிழந்தார். மார்டின் குப்டில் (35 பந்தில் 28 ரன்) 12ஆவது ஓவரின் முதல் பந்தில் அவுட்டானார். உண்மையாகச் சொல்லப்போனால் அணித்தலைவர் கேன் வில்லியம்சனைத் தவிர யாரும் சரியாக ஆடவில்லை.

அவர் 48 பந்தில் 85 ரன் எடுத்தார். அதில் 3 சிக்ஸ், 10 ஃபோர் அடங்கும். அவர் ஆட்டமிழக்கும்போது 13 பந்துகள் பாக்கியிருந்தன, ஒருவேளை அவர் அந்த 13 பந்துகளை ஆடியிருந்தால் அவர் சதமடித்திருக்கலாம்; நியூசிலாந்து அணி 200 மேல் எடுத்திருக்கலாம்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இருபது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி நாலு விக்கட் இழப்பிற்கு 172 ரன் எடுத்தது. 20 ஓவரில் 173 என்பது கொஞ்சம் கடினமான இலக்குதான்.

ஆனால் ஆஸ்திரேலிய அணி அதனை சுலபமாக எடுத்தது. தொடக்கத்திலிருந்தே அந்த அணி வீரர்கள் நன்றாக ஆடினார்கள். பத்து ஓவர் முடிவில் ஒரு விக்கட் இழப்பிற்கு அந்த அணி 82 ரன் எடுத்திருந்தது.

வார்னர் 38 பந்துகளில் 53 ரன்; மிட்சல் மார்ஷ் 50 பந்தில் 77 ரன்; கிளன் மேக்ஸ்வெல் 18 பந்தில் 28 ரன் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவரில் இலக்கை எட்டி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக வெல்கிறது. ஆட்டநாயகனாக ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் மார்ஷ் அறிவிக்கப்பட்டார்.

இந்த ஐ.சி.சி 2021 போட்டியின் நாயகனாக ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories