அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! கண் எரிச்சல், சூலை நோய், மூலம், மார்புவலி..!

health tips 1
health tips 1

சூலை நோய் நீங்க…

ஆகாரம் உட்கொண்ட சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு வகை வயிற்றுவலி உண்டாகும். காக்கட்டான் வேர், சிவதை வேர், சுக்கு. கடுகு ரோகிணி, திராட்சைப் பழம் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் காய்ச்சி சுண்ட வைத்து ஓர் ஆழாக்கு ஆக்கி, வேளைக்கு கால் ஆழாக்கு சாப்பிட்டு வந்தால் கழிச்சல் உண்டாகி குலை நோயின் வேகம் குறையும்.

மூலம், முளை மூலத்திற்கு…

வெள்ளை வெங்காயத்தையும் பனங்கற்கண்டையும், சம அளவில் நெய்யில் வதக்கி, நன்றாக அரைத்து கடுக்காயளவு இரண்டு வேளை சாப்பிடலாம். சுத்தரிக்காயை தீயில் சுட்டு சாம்பலாக்கி வெளியே பூசலாம்.

மார்பு வலிக்கு…

அகத்திக்கீரையைக் காய வைத்து இடித்து, சவித்து காலை, மாவை இருவேளையும் அரை தோலா தூள் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மார்பு வலி (நெஞ்சு வலி) குணமாகும்.

வெந்தயக் கீரையை 250 மில்லி நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அத்துடன் தேன் கலந்து ஒவ்வொரு வேளையும் இரண்டு அவுன்ஸ் அருந்தி வர நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மார்பு வலி குணமாகும்.

வீக்கம் சரியாக…

உடலில் எங்கு வீக்கம் ஏற்பட்டாலும் வேப்பிலையை வதக்கி வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் வாடி விடும்.
நன்னாரி வேரை நீர் விட்டுக் களிம்பு போல் அரைத்துப் பற்று போட்டு வந்தால் நீண்ட கால வீக்கமும் வடிந்து விடும்.

கண் எரிச்சலா?

நந்தியாவட்டை மலர்களை இரவில் கண்களில் கட்டிக் கொண்டு காலையில் எடுத்து விடலாம். இரண்டு மூன்று நாள்கள் கட்டி வந்தாலே நல்ல குணம் தெரியும்.
கற்றாழையின் சோற்றை கட்டி வந்தால் கண் எரிச்சல் குணமாகும்.

ஒரு துளி தாமரைத் தேன் அல்லது சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வந்தால் கண் எரிச்சல் தீரும். உச்சந் தலையில் சிறிது சிற்றாமணக் கெண்ணெய் வைத்து அதக்கி விட்டால் சீக்கிரம் குணம் தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories