பெண்களின் மலட்டுக்கு…
மாதுளம் விதை, மாதுளம் பூ இவற்றை கஷாயம் வைத்து சாப்பிடலாம். வேகியம் செய்தும் சாப்பிட்டு பலன் பெறலாம்.
சுளுக்குக்கு…
செம்மண்ணை நீரில் கரைத்து உப்பு. புளி சேர்த்து காய்ச்சி குழம்பாக வரும் சமயத்தில் எடுத்து பொறுக்கும் சூட்டில் பற்று போட சுளுக்கு நீங்கும்.
தீப்புண்ணுக்கு…
சோடா உப்பை சிறிது வெந்நீரில் கலந்து சுத்தமான துணியில் நனைத்து தீப்புண்ணின் மேல் போட்டு வர புண் ஆறிவிடும்.
சளித் தொல்லையா?
யூக்விட்டஸ் இலை ஒரு பிடி எடுத்து தண்ணீரில் போட்டு வேக வைத்து வடிகட்டி மூன்று வேளை சாப்பிட சளித் தொல்லை குறையும்.
வேர்க்குரு சரியாக…
50 கிராம் வெங்காயத்தை இடித்து சாறெடுத்து சம அளவு சுத்தமான நீர் கலந்து வேர்க்குரு மேல் தடவி அரை மணி நேரம் ஊறி குளிக்க வேர்க்குரு மறையும்.