Truecaller இல் உள்ள இந்த அம்சம்..!

Published:

true caller - 2026

நம்மில் பெரும்பாலானோரின் போன்களில் ட்ரூகாலர் ஆப் உள்ளது. தெரியாத எண்ணிலிருந்து யாராவது உங்களை அழைத்தாலும், அந்த நபரின் பெயரை ட்ரூ காலர் செயலி உங்களுக்கு தெரியப்படுத்தும்.

இது மொபைல்போன் பயன்படுத்தும் பலருக்கும் உதவியாக இருந்தாலும், ஒரு சில நேரங்களில் அழைப்புகள் வருவதை அல்லது உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி-எண்களை முன்கூட்டியே தெரியப்படுத்திவிடும்.

நெட்வொர்க் மெசேஜ் வருவதற்கு முன்பே எப்படி ட்ரூ காலர் ஐடியில் மெசேஜ் வருகிறது என யோசித்து அந்த செயலியை டெலிட் செய்தவர்களும் உள்ளனர். அப்படியான சந்தேகம் கொண்டவர்களாக இருந்தால், இதற்கான காரணம் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இதற்கான காரணம் என்னவென்றால், செல்லுலார் நெட்வொர்க்கின் வேகத்திற்கும் இணைய நெட்வொர்க்கின் அதிர்வெண்ணிற்கும் உள்ள வித்தியாசமாகும்.

டெலிகாம் நிறுவனங்களின் ஒவ்வொரு நெட்வொர்க்கும் ஒரு நிலையான அலைவரிசையில் இயங்குகிறது. இந்த நிறுவனங்கள் அழைப்புகளைச் செய்ய 450 முதல் 2700 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண்களைப் பயன்படுத்துகின்றன.

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

அதே பயன்பாடுகள் இணைய அதிர்வெண்களில் வேலை செய்கின்றன, இந்த அதிர்வெண் சுமார் 2 GHz ஆகும். இணையத்தின் வேகம் அழைப்பை விட பல மடங்கு வேகமானது.

இதனால், வேகமான அதிர்வெண் காரணமாக பயன்பாடு ஒடிபி உள்ளிட்ட தகவல்களை உங்கள் அதிகாரப்பூர்வ நெட்வொர்க் மெசேஜ் கொடுப்பதற்கு முன்பாகவே ட்ரூ காலர் ஐடியில் வந்துவிடுகிறது.

Related articles

Recent articles

spot_img