
மகிழம்பூப் புட்டு
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – ஒரு கப்
கடலைப்பருப்பு – கால் கப்
சர்க்கரை – முக்கால் கப்
நெய் – 5 டீஸ்பூன்
முந்திரி – 10
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன் தேங்காய்த் துருவல் – அரை கப்
உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:
பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து ஒருமணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும், உப்பு சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். மாவை இட்லித்தட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். ஆறிய பிறகு இட்லிகளை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுவிட்டு உதிர்த்து எடுக்கவும். சர்க்கரையுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். உதிர்த்த பருப்புடன் பாகை சிறிது சிறிதாகச் சேர்த்து உதிர் உதிராக இருக்கும்படி கிளறவும். இதனுடன் முந்திரி, நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.




