February 22, 2026, 4:30 PM
30.4 C
Chennai

மே 18… பத்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன…

tamizhilam 1 - 2026பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன. மே 18, 2009 – அவ்வளவு சுலபமாக மறக்க முடியுமா?

தமிழ் ஈழ இனப் படுகொலையில் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட நாள். தமிழக கடலோரத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் நமது தொப்புள் கொடி உறவுகள் அழிக்கப்பட்ட போது எதையும் செய்ய முடியாமல் கையாலாகாதவர்களாக இருந்தோம்.

2009 ஜனவரி 24 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசும் போது ஈழத்தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நிகழ்த்திய தாக்குதல்களை கண்டித்து உணர்ச்சியோடு உரையாற்றினேன். அன்று இரவு வைகோ அவர்கள் என்னை தொடர்பு கொண்டு மனமாரப் பாராட்டினார்.

அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன் தொடர்பு கொண்டார். ” வணக்கம் மைத்ரேயன் ! வன்னியிலிருந்து நான் நடேசன் பேசுகிறேன். தலைவர் பிரபாகரன் சார்பில் எங்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் “. அந்த பாசமான குரல் இன்றும் என் செவிகளில் ஒலிக்கிறது.

Ezham2 - 20262009 மார்ச் 11 அன்று மூன்றாவது அணியின் சார்பில் கர்நாடகா தும்குரில் திரு தேவகவுடா ஏற்பாட்டில் நடைபெற்ற மாநாட்டில் கழகத்தின் சார்பாக அம்மா அவர்களின் பிரதிநிதியாக நான் கலந்து கொண்டேன்.

அதே நாளில் சென்னையில் அம்மா அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தார். மதியம் 1மணி அளவில் நடேசன் என்னை தொடர்பு கொண்டு அம்மா அவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு பிரபாகரன் தனது நன்றியை தெரிவித்ததாக கூறினார்.

2009 ஏப்ரல் 26 அன்று இரவு சேலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அம்மா அவர்கள் தேர்தலுக்குப் பின் அமையவுள்ள ஆட்சியில் கழகம் பங்கேற்றால் இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழ் ஈழம் அமைப்பேன் என்று முழக்கமிட்டார். ஜெயா பிளஸ் தொலைக்காட்சி நேரலையில் அதைப்பார்த்து பிரபாகரன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். அருகில் இருந்த நடேசன் என்னை தொடர்பு கொண்டு அதை பகிர்ந்து கொண்டார்.

அதை நானும் கார்டனில் தெரிவித்து விட்டேன். இவை அனைத்தும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்.

அன்பு நண்பர் நடேசன் ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் ஒப்பந்தப்படி சரணடைந்த போது ஈவிரக்கம் இன்றி போர் விதிமுறைகளுக்கு மாறாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

2009 மே மாதம் 14 – 18 நாட்கள்….மறக்க முடியாத நாட்கள்.

நினைக்கிறேன் வலிக்கிறது. நெஞ்சமெல்லாம் கொதிக்கிறது.

– வா. மைத்ரேயன் எம்.பி., (அதிமுக., மாநிலங்களவை உறுப்பினர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories