"கண்ணன்" (மீ.விசுவநாதன்)
கண்ணன் ஒருகுழந்தை; கண்ணன் பெருங்கள்ளன்;
கண்ணன் ஒருதேவன்; காட்சிக்கார் வண்ணனிவன் என்றெல்லாம் சொல்வர் இறைபக்தி யாளர்;அவன் இன்று வருவானென் இல்.. மாக்கோலப் பாதம் மனதுள்ளே துள்ளித்தான் பூக்கோலம் போட, புதியதோர் தாக்கத்தால் பூரித்தேன்! பாதம் புலர்கதிர் போல்மின்ன வாரித்தூக் கத்தா வரம்.



