January 24, 2025, 4:53 AM
24.2 C
Chennai

தியாகராஜ சுவாமிகளின் ஆங்கில பிறந்த தினம் இன்று.. (4-5-1767)

அனைத்து உலகங்களிலும் ஹரியின் நாமத்தை சொல்லி தடையின்றி சென்று வரும் நாரத மகரிஷியின் அம்சமாக , நமகெல்லாம் ராம நாமத்தின் பெருமையை சுட்டி காட்ட அவதாரம் செய்த அவரது அடி தொழுது , அவரது சரித்திரத்தை தொடர்வோம் .

சுவாமிகளின் குருகுலம் இசை தேர்ச்சி

சுவாமிகள் திருவையாறு அரச வேத பாடசாலயில் சில காலம் படித்ததாக தெரிகிறது.

சுவாமிகளின் தனது சிறுவயதிலேயே கீர்த்தனை புரிவதில் வல்லவராக இருப்பதை அவரது தந்தையார் இராம பிருமம், கண்டு , எழுதி வைத்து அவைகளை ஊர் பண்டிதர்கள் முன்பாக சிறுவனான சுவாமிகளை பட வைத்து ஊக்குவித்தனர் ,

வறுமையும் பல வித குடும்ப சூழல் காரணமாக சுவாமிகள் ஸோண்டி வேங்கடரமணய்யாவிடம் சில மாதங்களே சங்கீதம் பயின்றார் (ஸோண்டி வேங்கடரமணய்யா மற்றும் அவரது தந்தை ஸுப்பைய்யாவும் தஞ்சாவூர் அரச சபை ஆஸ்தான விதவானாக புகழ் பெற்று விளங்கியவர்கள் )

தனது குருவிடம் பெரிதாக இவரால் கால அவகாச குறைவால் கற்று கொள்ள இயலவில்லை .

ALSO READ:  சமயபுரம் கோயிலில் புரட்டாசி பௌர்ணமி 108 விளக்கு பூஜை

சுவாமிகளின் தாய் வழி தாத்தா “வீணை காளஹஸ்தி அய்யா பரகதி அடைந்து பிறகு அவர் எழுதி வைத்திருந்த பல இசை நூல்களை தானே படித்து அவற்றில் தேர்ச்சி அடைந்தார் ..

வறுமையும் இவரது சகோதர்களின் துர்குணம் இவரது வாழ்வில் பல தொல்லைகளை அளித்தும் அவர் விடா முயற்சி கொண்டவராக இருந்திருக்கிறார் , அதற்க்கு அவர் தந்தை உறுதுணையாக இருந்திருப்பது இறைவன் சித்தமே.

சுவாமி வாழ்ந்த காலத்திலேயே அவரது புகழ் தென்னகம் எங்கும் பரவி இருந்தது, பலர் அவரது பக்தி பஜனைகளை கேட்க விரும்பினர் .

சென்னையை சேர்ந்த வணிகர் கோவூர் சுந்தர முதலியார் என்கிறவர் தியாகராஜரை தனது கிராமத்துக்கு வரவழைக்க வேண்டும் என்று விருப்பி , தியாகராஜரின் தந்தை இராம பிருமமத்தின் நண்பரும் நூறு வயது பிராயத்தரும் காஞ்சீபுரம் உபநிஷத் பிரம்மம் என்கிற பெரியவரை மூலமாக கடிதம் எழுத வைத்து அழைத்தார்.

காஞ்சீபுரம் செல்லும் வழியில் ஸ்ரீரங்கம் மற்றும் பல திவ்ய தேசங்களில் உறையும் பல சுவாமிகளின் மீது பல கீர்த்தனைகளை இயற்றினார் .

ALSO READ:  இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் முதல்நாள் தங்க குதிரை வாகனத்தை தெற்கு சித்திரை வீதி மேல சித்திர வீதி முனையில் கும்பலுக்கு நடுவில் சிக்கி தரிசிக்க முடியாமல், பெருமாள், ஒருவர் மூலமாக ஆவேசம் வந்து தனது பக்தர் நிற்பதை சுட்டி காட்டி , காத்திருந்து இவருக்கு தரிசனம் குடுத்த விசயத்தை எனது ஆசான் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார் சுவாமிகளின் தெலுங்கு கீர்த்தனைகளை சுட்டி காட்டி விவரமாக எழுதி இருக்கிறார் .

  • விஜயராகவன் கிருஷ்ணன்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng T20: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா இங்கிலாந்து முதல் டி-20 ஆட்டம்- கொல்கொத்தா-22 ஜனவரி 2025

பஞ்சாங்கம் ஜன.23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜன.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...