December 5, 2025, 10:49 AM
26.3 C
Chennai

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

sivapatham book release - 2025

அடியேன் தீபம் இதழாசிரியராக இருந்தபோது, 2015ல் பழக்கமானவர் ஹைதராபாத்தில் வசித்து வரும் திருமதி ராஜி ரகுநாதன். தஞ்சைத் தமிழர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத் திறன் வாய்ந்தவர். சிறுகதை, கட்டுரை, செய்திக் கட்டுரை என (தெலுகு மொழியில் இருந்து தமிழுக்கு) மொழிபெயர்ப்புத் தளத்தில் சிறப்பாக இயங்கி வருகிறார்.

நம் தினசரி இணையத்துக்கு ரிஷிபீடம் எனும் இதழில் இருந்து கட்டுரைகள், தலையங்கங்களை மொழி பெயர்த்து அனுப்பிய போது, ஆச்சரியமாகவும் மகிழ்வாகவும் இருந்தது. பாரதத்தின் பாரம்பரிய மணம் கமழும் தெளிவான, தீர்க்கமான, தைரியமான கருத்துகளுடன் அமைந்திருந்த கட்டுரைகள் அவை. எழுதியவர் சாமவேதம் சண்முக சர்மா என்று குறிப்பிட்டு அனுப்பிய போதுதான், அவர் குறித்து தெரிந்து கொள்ளும் ஆவலில் தேடத் தொடங்கினேன். மிகச் சிறந்த தேச பக்தர். அது ஒன்றே போதும் நம் மனம் ஈடுபாடு கொள்ள!

பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா – வாக்தேவியின் வரபுத்திரர், சமன்வய சரஸ்வதி போன்ற பல விருதுகளைப் பெற்றவர். தேச பக்தியையும் தெய்வ பக்தியையும் வளர்க்க 1999ல் ‘ருஷிபீடம் பாரத மானச பத்திரிக்கை’ என்ற பெயரில் மாத இதழைத் தொடங்கி, நடத்தி வருகிறார். இவரின் உபந்யாசங்கள் பாரத தேசம் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் நிறைவாக நடந்து வருகிறது. மகாபாரதம், சுந்தரகாண்டம், லலிதா சஹஸ்ரநாமம், ராமாயணம் என, பாரதத்தின் இதிகாச, புராணங்களுடன், அத்தனை பக்தி இலக்கியங்களும் பக்தர்களின் வரலாறுகளும் இவரின் உபந்யாசங்களில் பரிமளிக்கிறது!

இவரின் சொற்பொழிவுகளை ஆதாரமாகக் கொண்டு வெளிநாடுவாழ் பக்தர்கள் ஐந்து முதல் பதினெட்டு வயது வரை உள்ள குழந்தைகளிடம் பாரதப் பண்பாட்டையும் நல்லொழுக்கத்தையும் பேணும் விதமாக ‘துருவ ஞானம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, சிறப்பாக நடத்தி வருகிறார்கள். சிவ ஞானம், குரு ஞானம் ஆகிய அமைப்புகள் மூலம், இளைய தலைமுறைக்கு பாரத பண்பாட்டை பதியவைத்து வருகிறார்.

ருஷிபீடம் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் கோசாலைகள் அமைத்து பசுக்களை பராமரித்து வருவது, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது, சிறந்த மாணவர்களுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்துவது, வேத பண்டிதர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஆண்டு தோறும் விழா எடுத்து கௌரவிப்பது, சிதிலமடைந்த கோவில்களை புனரமைத்து, தூப தீப நைவேத்தியத்திற்கு வசதி செய்வது என நம் பாரம்பரியத் தளத்தில் இயங்கி வருபவர்.

இதன் காரணத்தால், இவருடைய கட்டுரைகள் தமிழ்த் தளத்தில் தொடர்ந்து நம் தளம் வழியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நிற்க!

மூன்று மாதங்களுக்கு முன், இவருடைய சம்ஸ்க்ருத கவிதை / பாடல்களின் தமிழாக்கத் தொகுப்பை (தெலுகு -> தமிழ்) அனுப்பி, இதை நூலாக்கித் தர முடியுமா என்று கேட்டார் நூலின் மொழிபெயர்ப்பாளரான திருமதி ராஜி ரகுநாதன். உடனே சரி என்றேன். காரணம் – சம்ஸ்க்ருதம் – தமிழ்.

பல்வேறு பணிகளுக்கும் இடையே இதை நூல் வடிவாக்கி, சம்ஸ்க்ருத பாடல்களின் பிழைகள் சரிபார்த்து, தமிழில் ஆர்வமுள்ள அனைவரும் படிக்கும் வகையில் வடிவமைத்து, அட்டையும் தயார் செய்து அனுப்பி வைத்தேன். ‘சிவபதம் – நடராஜ கீர்த்தனைகள்’ சம்ஸ்க்ருதம் – தமிழ் – தமிழில் விளக்கம் என இந்நூல் அச்சாகி வந்துள்ளது.

இந்த நூலின் வெளியீட்டு விழா சிதம்பரத்தில் கடந்த ஜன.20ம் தேதி, சிதம்பரம் தீட்சிதர் பெருமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் இந்தப் பிரதிகள் அங்கிருந்தோர் அனைவருக்கும் விலையில்லா வெளியீடாக அன்புடன் வழங்கப்பட்டுள்ளது.

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories