இந்து முன்னணி பெற்ற விருது!

IMG 20210311 WA0031 - 2026

விருதை #வீரத்துறவி இராம கோபாலன் அவர்களுக்கும், #பலிதானிகளுக்கும், கடும் பணியாற்றுகின்ற #பொறுப்பாளர்களுக்கும் #சமர்ப்பணம் செய்கிறேன் – இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பூனாவில் உள்ள RSS ஜன கல்யாண் அமைப்பு மிகவும் பிரபலமான ஒரு சேவை அமைப்பு.

1972 ம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்ச காலத்தில் அமைக்கப்பட்டு இன்று மாநிலம் முழவதும் கல்வி, மருத்துவம், சமுதாய விழிப்புணர்வு, பெண்கள் மேம்பாடு, குழந்தைகள் நலன் உள்ளிட்ட 8 வகையான சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இதன் பொறுப்பாளர்கள் இயங்கி வருகின்றனர்.

பூனாவில் மட்டுமே மூன்று மிகப்பெரிய இரத்த வங்கிகள் இருக்கின்றன. உலகில் எங்குமே இல்லாத சிறந்த உபகரணங்கள் கொண்டிருப்பது இதன் சிறப்பு (லேப்).

RSS #ஜனகல்யாண் சமிதி பாரத நாடு முழுவதும் இது போன்ற சேவைப் பணிகளில் , சமுதாய விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடவோர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.

கடந்த 21 ஆண்டுகளாக பல்வேறு அரிய செயல்களை செய்தவர்களுக்கு விருது வழங்கியுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு- 2021- இரண்டு விருதுகளை வழங்கியது.

தமிழகத்தில் சமுதாய விழிப்புணர்வு பணியில் கடந்த 40 ஆண்டுகளாக இணையற்ற வகையில் ஈடுபட்டு வருகின்ற அமைப்பு என்ற வகையில் இந்துமுன்னணி பேரியக்கத்திற்கு விருது வழங்கி கௌரவித்தது.

இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் விருதைப் பெற்றுக்கொண்டார்.

மற்றொரு ‌விருதானது சுவாமி சத்யநாராயணா கோவில் மட்டுமில்லாது நாடு நெடுகிலும் பிரம்மாண்டமான பல கோவில்களை வடிவமைப்பாளரும் (ஆர்கிடெக்ட்), தற்போது அயோத்தியில் அமையவுள்ள கோவிலின் வடிவமைப்பாளருமான திரு.சோமபுரா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜனகல்யாண் சமிதி அமைப்பின் மாநிலத் தலைவர்,
மகாராஷ்டிரா RSS ன் மாநிலத் தலைவர்,
ராமானந்த சாகர் அவர்கள் இயக்கிய ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட நாடகங்களுக்கு செட் வடிவமைப்பு செய்தவரும், மற்றும் மும்பை சினிமா துறையின் தலைசிறந்த வடிவமைப்பாளருமான (ஷூட்டிங் செட்) திரு. நிதின் தேசாய் அவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் RSS அகில பாரத செயற்குழு உறுப்பினர்- மூத்த பிரச்சாரக் ஸ்ரீ.சுஹாஸ்ராவ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories