குமரி அனந்தன் என்ற தேசபக்தர்!

senkottai sriram in gandhi study centre - 2026

20 வருடம் முன்னர் கலந்து கொண்ட நிகழ்ச்சி இது. ஆனால் மறக்க முடியாத நிகழ்ச்சி..!

காந்தி ஸ்டடீ செண்டர் நடத்தி வந்த நண்பர் அண்ணாமலையின் அழைப்பின் பேரில் அங்கே ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். (சென்னை, தி.நகர், வெங்கடநாராயணா சாலை, தக்கர் பாபா வித்யாலயாவில்)

எனது பேச்சில் ஒரு விஷயத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாகச் சொன்னேன். அடியேன் வைணவன். எங்களுக்கு திருமால் உறையும் 108 திருத்தலங்கள் மிக முக்கியம். அவற்றை திவ்ய தேசங்கள் என்று சொல்லி நாங்கள் வழிபடுவதுண்டு. ஒரு முறையேனும் அந்தத் தலங்களுக்குச் சென்று அந்தத் தலத்தின் பெருமானை வணங்கி வழிபடுவது வாழ்நாள் பயனெனக் கொள்வோம்.

இப்போது இங்கே இருக்கும் நாம் அனைவரும் தேசபக்தர்கள். தேசபக்தர்களாயிருக்கையினாலே தான் இந்த நிகழ்ச்சிக்குக் கூடியிருக்கிறோம். நமக்கும் திவ்யதேசங்கள் உண்டு. எங்கள் ஊர் செங்கோட்டை தேசபக்தர்களாகிய நமக்கு ஒரு திவ்யதேசம். அங்கேதான் நூறாண்டுகளுக்கு முன் பாரதமாதா சங்கம் அமைத்து தேசபக்த இளைய திலகங்கள் தங்கள் ரத்தத் திலகங்களால் உறுதி எடுத்தார்கள். அவர்கள் காலடி பட்ட மண் நமக்கு திவ்யதேச மண் – என்ற ரீதியில் நெல்லை மண்ணின் சுதந்திர எழுச்சியை தொட்டுக்காட்டி சொல்லிக் கொண்டிருந்தேன்.

முதல் வரிசையில் கீழே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெரியவரின் கண்களில் நீர் பெருகி ஓடியது. அதை நான் மேடையில் பேசிக் கொண்டிருந்த படியே கவனித்தேன். தன் கண்களை அடிக்கடி துடைத்து தன் மெய்சிலிர்ப்பை வெளிப்படுத்தினார்!

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

பேசி முடித்து கீழே இறங்கிய எனக்கு வணக்கமிட்டார்… கை கொடுத்தார்… ஆரத் தழுவிக் கொண்டார். இப்போது தான் நான் தேசபக்தர்களின் திவ்யதேசம் என்ற வார்த்தையைக் காதில் கேட்கிறேன்… என்றார் நாத் தழுதழுக்க!

அந்தப் பெரியவர் – குமரி அனந்தன்.

பலமுறை செங்கோட்டைக்கு வந்திருக்கிறார். வாஞ்சிநாதன் குறித்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறார். வாஞ்சி மணியாச்சி என்ற ரயில் நிலையம் பெயர் வருவதற்குக் காரணம் குமரி அனந்தனே! அன்னார் ஏப்.8 செவ்வாய் அன்று காலமாகிவிட்டார். அவருடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, அவர் செய்த பணிகளைப் போற்றுகிறோம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

Topics

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

பஞ்சாங்கம் ஜூலை 02 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

Entertainment News

Popular Categories