December 5, 2025, 10:49 AM
26.3 C
Chennai

குமரி அனந்தன் என்ற தேசபக்தர்!

senkottai sriram in gandhi study centre - 2025

20 வருடம் முன்னர் கலந்து கொண்ட நிகழ்ச்சி இது. ஆனால் மறக்க முடியாத நிகழ்ச்சி..!

காந்தி ஸ்டடீ செண்டர் நடத்தி வந்த நண்பர் அண்ணாமலையின் அழைப்பின் பேரில் அங்கே ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். (சென்னை, தி.நகர், வெங்கடநாராயணா சாலை, தக்கர் பாபா வித்யாலயாவில்)

எனது பேச்சில் ஒரு விஷயத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாகச் சொன்னேன். அடியேன் வைணவன். எங்களுக்கு திருமால் உறையும் 108 திருத்தலங்கள் மிக முக்கியம். அவற்றை திவ்ய தேசங்கள் என்று சொல்லி நாங்கள் வழிபடுவதுண்டு. ஒரு முறையேனும் அந்தத் தலங்களுக்குச் சென்று அந்தத் தலத்தின் பெருமானை வணங்கி வழிபடுவது வாழ்நாள் பயனெனக் கொள்வோம்.

இப்போது இங்கே இருக்கும் நாம் அனைவரும் தேசபக்தர்கள். தேசபக்தர்களாயிருக்கையினாலே தான் இந்த நிகழ்ச்சிக்குக் கூடியிருக்கிறோம். நமக்கும் திவ்யதேசங்கள் உண்டு. எங்கள் ஊர் செங்கோட்டை தேசபக்தர்களாகிய நமக்கு ஒரு திவ்யதேசம். அங்கேதான் நூறாண்டுகளுக்கு முன் பாரதமாதா சங்கம் அமைத்து தேசபக்த இளைய திலகங்கள் தங்கள் ரத்தத் திலகங்களால் உறுதி எடுத்தார்கள். அவர்கள் காலடி பட்ட மண் நமக்கு திவ்யதேச மண் – என்ற ரீதியில் நெல்லை மண்ணின் சுதந்திர எழுச்சியை தொட்டுக்காட்டி சொல்லிக் கொண்டிருந்தேன்.

முதல் வரிசையில் கீழே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெரியவரின் கண்களில் நீர் பெருகி ஓடியது. அதை நான் மேடையில் பேசிக் கொண்டிருந்த படியே கவனித்தேன். தன் கண்களை அடிக்கடி துடைத்து தன் மெய்சிலிர்ப்பை வெளிப்படுத்தினார்!

பேசி முடித்து கீழே இறங்கிய எனக்கு வணக்கமிட்டார்… கை கொடுத்தார்… ஆரத் தழுவிக் கொண்டார். இப்போது தான் நான் தேசபக்தர்களின் திவ்யதேசம் என்ற வார்த்தையைக் காதில் கேட்கிறேன்… என்றார் நாத் தழுதழுக்க!

அந்தப் பெரியவர் – குமரி அனந்தன்.

பலமுறை செங்கோட்டைக்கு வந்திருக்கிறார். வாஞ்சிநாதன் குறித்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறார். வாஞ்சி மணியாச்சி என்ற ரயில் நிலையம் பெயர் வருவதற்குக் காரணம் குமரி அனந்தனே! அன்னார் ஏப்.8 செவ்வாய் அன்று காலமாகிவிட்டார். அவருடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, அவர் செய்த பணிகளைப் போற்றுகிறோம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories