April 23, 2025, 2:04 PM
35.5 C
Chennai

குமரி அனந்தன் என்ற தேசபக்தர்!

20 வருடம் முன்னர் கலந்து கொண்ட நிகழ்ச்சி இது. ஆனால் மறக்க முடியாத நிகழ்ச்சி..!

காந்தி ஸ்டடீ செண்டர் நடத்தி வந்த நண்பர் அண்ணாமலையின் அழைப்பின் பேரில் அங்கே ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். (சென்னை, தி.நகர், வெங்கடநாராயணா சாலை, தக்கர் பாபா வித்யாலயாவில்)

எனது பேச்சில் ஒரு விஷயத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாகச் சொன்னேன். அடியேன் வைணவன். எங்களுக்கு திருமால் உறையும் 108 திருத்தலங்கள் மிக முக்கியம். அவற்றை திவ்ய தேசங்கள் என்று சொல்லி நாங்கள் வழிபடுவதுண்டு. ஒரு முறையேனும் அந்தத் தலங்களுக்குச் சென்று அந்தத் தலத்தின் பெருமானை வணங்கி வழிபடுவது வாழ்நாள் பயனெனக் கொள்வோம்.

இப்போது இங்கே இருக்கும் நாம் அனைவரும் தேசபக்தர்கள். தேசபக்தர்களாயிருக்கையினாலே தான் இந்த நிகழ்ச்சிக்குக் கூடியிருக்கிறோம். நமக்கும் திவ்யதேசங்கள் உண்டு. எங்கள் ஊர் செங்கோட்டை தேசபக்தர்களாகிய நமக்கு ஒரு திவ்யதேசம். அங்கேதான் நூறாண்டுகளுக்கு முன் பாரதமாதா சங்கம் அமைத்து தேசபக்த இளைய திலகங்கள் தங்கள் ரத்தத் திலகங்களால் உறுதி எடுத்தார்கள். அவர்கள் காலடி பட்ட மண் நமக்கு திவ்யதேச மண் – என்ற ரீதியில் நெல்லை மண்ணின் சுதந்திர எழுச்சியை தொட்டுக்காட்டி சொல்லிக் கொண்டிருந்தேன்.

முதல் வரிசையில் கீழே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெரியவரின் கண்களில் நீர் பெருகி ஓடியது. அதை நான் மேடையில் பேசிக் கொண்டிருந்த படியே கவனித்தேன். தன் கண்களை அடிக்கடி துடைத்து தன் மெய்சிலிர்ப்பை வெளிப்படுத்தினார்!

ALSO READ:  சமஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும்: அக்ஷி பாத்ர நியாய:

பேசி முடித்து கீழே இறங்கிய எனக்கு வணக்கமிட்டார்… கை கொடுத்தார்… ஆரத் தழுவிக் கொண்டார். இப்போது தான் நான் தேசபக்தர்களின் திவ்யதேசம் என்ற வார்த்தையைக் காதில் கேட்கிறேன்… என்றார் நாத் தழுதழுக்க!

அந்தப் பெரியவர் – குமரி அனந்தன்.

பலமுறை செங்கோட்டைக்கு வந்திருக்கிறார். வாஞ்சிநாதன் குறித்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறார். வாஞ்சி மணியாச்சி என்ற ரயில் நிலையம் பெயர் வருவதற்குக் காரணம் குமரி அனந்தனே! அன்னார் ஏப்.8 செவ்வாய் அன்று காலமாகிவிட்டார். அவருடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, அவர் செய்த பணிகளைப் போற்றுகிறோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

Topics

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

ப்ளீஸ்… கூட்டத்துல இதையெல்லாம் பேசுங்களேன்! – தென்காசி எம்.பி.க்கு ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் கோரிக்கைகள்!

இது ஒரு முக்கியமான கோரிக்கை! எளிதாக நிறைவேற்றக் கூடியது தான். காலையில் பொதிகை அதிவேக விரைவு ரயில் வண்டி எண் 12661 சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு வரும்போது தென்காசிக்கு காலை

பஞ்சாங்கம் ஏப்ரல் 22- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அனைத்திலும் ஜொலித்த குஜராத் அணி!

          குஜராத் அணியின் அணித்தலைவர், இன்று 90 ரன் எடுத்த ஷுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Entertainment News

Popular Categories