
ஐ.பி.எல் 2025 – ராஜஸ்தான் vs குஜராத் – 09.04.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
குஜராத் ஜெயண்ட்ஸ் அணி (217/6, சாய் சுதர்ஷன் 82, ஜாஸ் பட்லர் 36, எம். ஷாருக் கான் 36, ராகுல் தெவாத்தியா 24, துஷார் தேஷ்பாண்டே 2/53, மஹீஷ் தீக்ஷணா 2/54, ஆர்ச்சர், சந்தீப் ஷர்மா தலா ஒரு விக்கட்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (19.2 ஓவர்களில் 159, சஞ்சு சாம்சன் 41, ஷிம்ரன் ஹெட்மயர் 52, ரியான் பராக் 26, பிரசித் கிருஷ்ணா 3/24, ரஷீத் கான் 2/37, சாய் கிஷோர் 2/20, முகம்மது சிராஜ், அர்ஷத் கான், குல்வந்த் கிகிஜோரிலியா தலா ஒரு விக்கட்) 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த குஜராத் அணியின் அணித்தலைவர் ஷுப்மன் கில் ( 2 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்துவிட்டர். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான, தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் (53 பந்துகளில் 82 ரன், 8 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினார். அவருடன் இணைந்து ஜாஸ் பட்லர் (25 பந்துகளில் 36 ரன்) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான ஷாருக் கான் (20 பந்துகளில் 36 ரன்) இருவரும் சிறப்பாக ஆடினர். ரூதர்ஃபோர்டு (7 ரன்) இன்று சரியாக ஆடவில்லை. ராகுல் திவாத்தியா (12 பந்துகளில் 24 ரன்) மற்றும் ரஷீத் கான் (4 பந்துகளில் 12 ரன்) இருவரும் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ரன் சேத்தனர். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 6 விக்கட் இழப்பிற்கு 217 ரன் எடுத்தது.
218 ரன் என்ற கடினமான இலக்கை எதிர்கொண்ட ராஜஸ்தான் அணியின் தொடக்க வீர யசஷ்வீ ஜெய்ஸ்வால் (6 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து மூன்றாவது ஓவரில் நிதீஷ் ராணா (1 ரன்) ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் (28 பந்துகளில் 41 ரன்) ரியன் பராக் (14 பந்துகளில் 26) உடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதற்குப் பின்னால் வந்த ஷிம்ரோன் ஹெட்மயர் (32 பந்துகளில் 52 ரன்) மட்டும் பொறுப்புடன் ஆடினார். பிற வீரர்களான துருவ் ஜுரல் (5 ரன்), சுபம் துபே (1 ரன்), ஆர்ச்சர் (4 ரன்), மஹீஷ் தீக்ஷணா (5 ரன்), துஷார் தேஷ்பாண்டே (3 ரன்) சந்தீப் ஷர்மா (ஆட்டமிழக்காமல் 6 ரன்) ஆகியோர் சின்று சரிவர ஆடவில்லை.
அதனால் ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
குஜராத் அணியின் மட்டையாளர் சாய் சுதர்ஷன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.