February 11, 2025, 4:47 PM
30.4 C
Chennai

நகுலன் எனும் படைப்பாளி..!

nagulan-kavithai
nagulan-kavithai

தமிழின் நவீன இலக்கியத்தில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், திறானாய்வு போனற துறைகளில் சோதனயும், சாதனையும் படைத்த எழுத்தாளர் டி.கே.துரைசாமி என்னும் நகுலன்.

அவர் எழுதிய புதுக்கவிதை…

“அணைக்க ஒரு
அன்பில்லாத மனைவி
வளர்க்க இரு நோயுற்ற சேய்கள்
வசிக்கச் சற்றும்
வசதியில்லாத வீடு
உண்ண என்றும்
உருசியில்லா உணவு
பிழைக்க ஒரு
பிடிப்பில்லா தொழில்
எல்லாமாகியும்
ஏனோ உலகம் கசக்கவில்லை”

அவர் 1921 ஆண்டில் கும்பகோணத்தில் பிறந்தவர். கும்பகோணம் “Oxford of South India” என்று பேசப்பட்ட இலக்கிய மகாமகம். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலப் பட்டம் பெற்றுத் திருவனந்தபுரத்தில் மார் இவானீஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார்.

அவர் ஒரு படைப்பு எழுத்தாளர். அவரின் ஒவ்வொரு படைப்பும் தனித்தன்மையும், புதுமையும் நிறைந்தது. 2007ஆம் ஆண்டில் மரணம் அடையும் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தவர். அவர் எழுத்தின் மீதும், வாழ்க்கை மீதும் நம்பிக்கை வைத்து இறுதி மூச்சு வரை உறுதியோடு எழுதியவர்.

நவீன கவிதை, கட்டுரை, கதைகள் கொண்ட தொகுப்பைக் “குருஷேத்திரம்” என்னும் தலைப்பில் 1968ஆம் ஆண்டில் வெளியிட்டார். இது அனைவரின் கவனத்தைப் பெற்றது. புதிய எழுத்தாளர்களை அடையாளப்படுத்திய தொகுப்பு.

நகுலன் ஏழு நாவல்கள் எழுதியுள்ளார். அவற்றில் 1972 ஆம் ஆண்டில் வெளிவந்தது நினைவுப்பாதை நாவல். இது கதை சொல்லும் நாவல் இல்லை; வாழ்க்கையைப் பற்றிப் பேசும் படைப்பு. நகுலன் இலக்கியவாதிகளின் எழுத்தாளராக இருந்தார் என்பதே அவரின் தனிச்சிறப்பு.

nagulan-kavithaigal1
nagulan-kavithaigal1

நினைவுப்பாதை வாழ்க்கை என்னும் கருத்தை வாழ்கின்ற மனிதன் மூலம் சொல்லுகிறது… என்றும் படிக்க வேண்டிய படைப்பு.. விளம்பர உலகத்தில் அசல் எழுத்துக்கள் ஒதுக்கப் பட்டாலும் போலி எழுத்துக்களை ஒழித்து விட்டுக் காலம், காலமாக நிரந்தரமாக இருப்பது அசல் எழுத்துக்கள் மட்டுமே. இதுவே உலகின் இலக்கியச் சரித்திரமாக இன்றும் இருக்கிறது.

நகுலன் புதுக்கவிதைப் படைப்பில் அறியப்பட வேண்டியவர். அவர் ஓசை நயத்தோடு வாழ்வின் தத்துவதை இரண்டு சொற்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

நான் கவிதை பற்றிப் படிக்கும் போது “Diction is the poetry” என்று படித்தேன். இக்கவிதையில் சொல்லாட்சியே கவிதை என்பதை அறிந்து கொண்டேன்.

நம் வாழ்க்கை முறை அந்நியப்பட்டு வருவதைச் சொல்லும் கவிதை..

“ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை”

  • நகுலனின் கவிதை வரிகள்:

இந்தியத் தத்துவவியலின் மாயா வாதத்தை நகுலனின் கவிதைகளில் காணலாம். “காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ” என்ற மகாகவி பாரதியைப் போல் நகுலன் வாழ்தல், மறைதல் நிகழ்வுகளைத் தத்துவார்த்தமாய் அணுகுகிறார்.

இருப்பதெற்கென்றுதான்
வருகிறோம்…
இல்லாமல் போகிறோம்
– எனும் வரிகளின் வீச்சு வாசகனின் கன்னத்தில் அறைகிறது. பாரதியின் காண்பது, மறைவது சொற்கள் போல் நகுலனின் இருப்பது, மறைவது என்ற சொற்கள் நிலையாமையை நிலையானதாய்க் காட்டுகின்றன. இந்தக் கவிதை மௌனியின் கதைகளை நினைவு படுத்துகிறது. மெய்ப்பொருள் காணும் முயற்சியில் நகுலன் கவிதைகள் வாசகனை ஈடுபடவைக்கின்றன.

சகமனிதர்கள் மீதான அக்கறை கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்துவரும் வேளையில் உலகியல் உண்மையை ராமச்சந்திரன் கவிதை மூலம் அதிர்ச்சியோடு காட்டுகிறார்.

அன்றாட வாழ்வின் சிறுசம்ப வத்தைக்கூடச் சமூகத்தைக் காட்டும் கண்ணாடியாக நகுலனால் மாற்றிக்காட்ட முடிகிறது. எதற்கு மற்றவர்களோடு பேசுகிறோம் என்பதை அறியாத, இயந்தரத்தனமான உரையாடல்களை நாம் மேற்கொள் கிறோம் என்பதை நகுலன் இப்படிச் சொல்கிறார். தனிமை நகுலனின் கவிவேர்.

எனக்கு
யாருமில்லை
நான்
கூட… – என்ற கவிதையைப் புரிந்துகொள்ள நெடுநேரம் தேவைப்படுகிறது.

நகுலன், நகுலனின் சாயலில் மட்டுமே கவிதைகள் எழுதினார். அவர் முகமே அவருக்குப் போதுமானதாய் இருந்தது. தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை விளம்பர மயமானதாய் நகுலன் நினைத்தார்… என்பதே அவரின் யதார்த்த நிலையை விளக்குகிறது!

  • பேராசிரியர் சுபாசு சந்திரபோசு , திருச்சி

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories