ஐயா சிவாஜி!

shivaji ramadoss - 2026

நூற்றாண்டு பல முன்பு
நாளொன்றில் நீயெங்கோ
மேற்கத்தி மலைப்பாறை
மீதங்கே வீற்றிருந்தாய்.

மின்வெட்டுப் போன்றேயோர்
மெய்சிலிர்ப்பு கணநேரம்;
உன்னுள்ளம் உத்வேக
ஊற்றினிலே சிலிர்த்ததுவே:

“சீர்கெட்டு சிதறுண்ட
தாய்நாட்டை தர்மத்தின்
ஓர்சக்திக் கோட்டையென
உயர்த்திடுவேன் உறுதியிதே”

மலைச் சுனைநீர் மறைந்தொடுங்கி
மலைப் பிளவில் தேங்கிவிடும்;.
அலையறைந்து அருவிநீரோ
மலையினையும் பிளந்துவிடும்.

சுனைநீராய் இருந்தாய்நீ,
சுழன்றெழுந்தாய் அருவியென!
வினவியது வியப்படைந்த
உலகமுமே உனைக்கண்டு:

“விண்முட்டும் இவர்கீர்த்தி,
மண்முட்டும் பகைத்தலைகள்;
கண்ணுக்கும் எட்டாமல்
கிடந்ததுதான் எவ்வாறு?”

எத்தனைதான் நூற்றாண்டு
இருட்டடிக்கப் பட்டாலும்
சத்தியம்தான் சாகாது,
சபித்தாலும் ஓயாது.

உன்குரலில் ஒலித்திட்ட
உயரியதோர் சத்தியத்தை
என்றைக்கோ உதவாது
என்றுலகோர் இகழ்ந்திட்டார்;

மேலான முறையிலது
வரலாற்று ஏடுகளில்
நூலோரின் புரட்டுகளை
தகர்த்திடுது பார்இன்று!

மரணமிலா ஒன்றினையே
மாய்ப்பதுதான் சாத்தியமா?
பரிசுத்த பக்தியினைப்
பாதகமும் என்செய்யும்?

உன் குரலின் சத்தியத்தின்
உயர்வதனை உணர்கின்றோம்,
உன் பார்வை எதிர்கால
உன்னதத்தில் நிலைத்திடுது.

உந்தனது கனவிலுறு
உயர்வதனை யாரறிவார்!
உன்தவத்தின் உறுபயனை
உணர்கின்றோம் இன்றைக்கு.

உனதுபடை ,உனதுகொடி,
உன்குதிரை உன்வாள்வேல்
உன்வீரப் போர்முழக்கம்
“ஹரஹரஹர, ஹரஹரஹர”

இவை எதுவும் இன்றில்லை;
என்றாலும் உன்நாமம்
சுவையோடு முன்னோரின்
செய்தியினைப் பரப்பிடுது!

50 ஆண்டுகள் ஆகின்றன. 1974 ல் சிவாஜி மகாராஜா முடிசூடியதன் முன்னூறாவது ஆண்டு விழாவின் போது அன்றைய ஹிந்துத்துவ வார இதழ் ‘தியாகபூமி’ சிவாஜி மலர் வெளியிட்டது. அந்த மலரில் (சத்ரபதி சிவாஜி பற்றி ரவீந்திரநாத் தாகூர் இயற்றி நான் தமிழாக்கிய) இந்தக் கவிதை இடம் பெற்ற்து.

தாகூரின் ‘O Shivaji!’ என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம்
தமிழில் ‘ஸருமன்’ என்ற புனைபெயரில்’ – சங்கர. மகாதேவன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories