
போர் வேண்டாம்தான்..!
ஆனால்…
பங்கரவாதம் துளியும் வேண்டாமே!
வாழு; வாழ விடு!
என்றிருந்தால்
யுத்தங்கள் மூளப் போவதில்லை!
பிறரைக் கொல்வதே கடமையென்று
போதிக்கப்பட்ட ஈனப்
பிறவிகளுக்கு …
உயிரைக் கொல்வது தகாதெனும்
போதிமரத்தடி ஞானம்
புலப்படாதுதான்!
பிறரை வாழ விடாத போது
நீ வாழ்வதில்
உலகத்துக்கு பாரமே!
உலகம் அந்த பாரத்தை
நித்தமும் சுமந்தால்…
அது மகா பாதகம்!
உலக பாரத்தைக் குறைக்கவே
யுத்தமும் நடந்தால்…
அது மகா பாரதம்!
புயலுக்குப் பின்னே அமைதியாம்!
போருக்குப் பின்னும் அமைதிதான்!
அந்த
அமைதி மார்க்கத்தைக் காட்டும்
இது நவீன பாரதம்!





