போர் வேண்டாம்தான்! ஆனால்…

Published:

terrorism killed so many in india - 2026

போர் வேண்டாம்தான்..!
ஆனால்…
பங்கரவாதம் துளியும் வேண்டாமே!

வாழு; வாழ விடு!
என்றிருந்தால்
யுத்தங்கள் மூளப் போவதில்லை!

பிறரைக் கொல்வதே கடமையென்று
போதிக்கப்பட்ட ஈனப்
பிறவிகளுக்கு …

உயிரைக் கொல்வது தகாதெனும்
போதிமரத்தடி ஞானம்
புலப்படாதுதான்!

பிறரை வாழ விடாத போது
நீ வாழ்வதில்
உலகத்துக்கு பாரமே!

உலகம் அந்த பாரத்தை
நித்தமும் சுமந்தால்…
அது மகா பாதகம்!

உலக பாரத்தைக் குறைக்கவே
யுத்தமும் நடந்தால்…
அது மகா பாரதம்!

புயலுக்குப் பின்னே அமைதியாம்!
போருக்குப் பின்னும் அமைதிதான்!

அந்த
அமைதி மார்க்கத்தைக் காட்டும்
இது நவீன பாரதம்! 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img