இயமத்தில் வளர்ந்த குரு சீட தத்துவம்!

Published:

himalayas - 2026
இமயத்தின் வசீகரம்…
என்னுள்
ஆதி காலத்தை
வேத காலத்தை
காட்சிப் படுத்தியது!

நதிக்கரை நாகரிகங்கள்
தலையெடுத்த காலம்!

இயற்கையின் ரகசியத்தை
முயன்று பெற்ற முனிகள் குருமார்கள்!

வாழ்க்கைக் கல்வி கொடுத்து
அறிவின் தெளிவை
சீடனுக்கு அளித்த காலம்!

சீடனின் வளர்ச்சியில்
பொறாமைப் படாத ஆசிரியர்.

சீடனுக்காகவே தன்னைக்
கரைத்துக் கொண்ட குருமார்கள்!

சீடன் பெறும் புகழை
தானே பெற்றதாய் எண்ணிய குரு!

குரு – சீடன் உறவில்
தந்தை – மகன் உறவைக் காட்டிலும்
பிணைப்பு அதிகம்தான்!

முன்னது தியாகத்தால் விளைவது
பின்னது வெற்றுக் கடன்!

அந்த தியாகத்தின் பிரதிபலன்…

ஆசிரியரின் நலனை
தன்னுயிரினும் மேலாய் நாடும் சீடன்!

எப்போதும் உச்சரிக்கிறான்….

ஓம் ஸஹ நா வவது |
ஸஹநௌ புனக்து |
ஸஹ வீர்யம் கரவாவஹை |
தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித் விஷாவஹை ||
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி ||

ஆசிரியர், சீடர் – நம் இருவரையும் இறைவன் காப்பாராக !
அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்க ஊக்குவிப்பாராக !
நாம் இருவரும் ஈடுபாடு மிக்க ஆற்றலுடன் உழைப்போமாக !
கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும் !
எதற்காகவும் நாம் ஒருவரை ஒருவர் வெறுக்காமல் இருப்போமாக !

ஓம் ஒலி எங்கும் நிறையட்டும்!
எங்கும் மும்முறை அமைதி நிலவட்டும்!

இப்போது…
நிகழ்காலம்
நெஞ்சில் நிழலாடுகிறது!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img