December 5, 2025, 11:25 PM
26.6 C
Chennai

எழுந்து வா… என் தலைவா …!

karunanidhi50 politics - 2025

அழியாத தமிழ்க் காவியம்
தமிழர்கள் மனத்தில் அழியாத ஓவியம்
தமிழ்த் தாய் அஞ்சுகம் பெற்றெடுத்து
தமிழுக்கு தாரை வார்த்த தவப் புதல்வன்!

திருக் குவளை தந்த சீமான்
தமிழ் கண்ட தலைமகன்
செம்மொழி தந்த செந்தமிழன்
இலட்சம் பேர் அமர்ந்திருக்க
சிங்கமாய் மேடையில் நீ வந்தமர்ந்து கரகரத்த குரலில்
காட்டாற்றில் பிரவாகமெடுக்கும்
குற்றால அருவியாய்க்
கொட்டும் உன் அழகுத் தமிழ்ச் சொல் கேட்கும் போது

கடல் அலையாய் ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டத்தில்
கரவொலி விண்ணைப் பிளக்குமே ..!

செவிடன்கூட
உன் செந்தமிழ் கேட்டு
செவி மடுப்பான்
உன் உவமைத் தமிழால்
ஊமையாய் இருப்பவன் கூட
உன் குரல் கேட்டு வீரம் கொள்வானே
உன்னைப் போல பேசத் துடிப்பானே
என் தலைவா

உன் குரலைக் கேட்க எத்துணை உள்ளங்கள் ஏங்கும்
கார்மேகத்தைக் கிழித்து வரும்
கதிரவனின் கதிர் வீச்சாய்
உன் வரவைக் கண்ட பின்னே
ஆர்ப்பரிக்கும் கரகோஷம்
அய்யா… மெய்சிலிர்க்கிறதே

சிங்கமாய் சீறிப்பாயும் ஆதார அறிக்கைகளைக் கண்டு
அஞ்சாதவர்களுண்டோ

அலறியவர் கோடியுண்டு
களம் பார்த்து எதிரியை வீழ்த்தி வெற்றி கொள்ளும்
சூத்திரம் அறிந்தவர் நீங்களய்யா
உமது அதிரடிப் பேச்சைக் கண்டு
இரு விழி உயர்த்தியவர் ஏராளம்

உயிரினும் மேலான
என் அன்பு உடன்பிறப்பே … என்ற
ஒரு வரிக்கு தானய்யா …

உம்மைக்  காண இன்று
காவேரி வாசலில் கால்கடுக்கக் காத்துக் கிடக்கோம்
உமது வசீகர வார்த்தையால்
வீழ்ந்தவர்கள்தான் இந்த தொண்டர்கள்

அய்யா நீர் பேசியதால் தான்
நம் தமிழ் மொழி செம்மொழி என்ற அழகு பெற்றது..
என் ஆற்றலின் ஊற்றே தமிழகம் தன்மானத் தலைவா
தமிழ்த் தாய் மடியில் தலை சாய்த்து உறங்கும் நீ…
உறக்கமின்றி உன் வழிகாட்டுதல்களில்
உன் பின்னே அணிவகுத்து வந்த
உடன் பிறப்புகள் …
காத்து நிற்கிறோம் உன் அழகுத் தமிழ்க் குரல் கேட்க

எழுந்துவா ..
எழுந்து வா..
என் தலைவா

இன்று உலகில் உன் பெயர்
உச்சரிக்காதோர் உண்டோ…
இக்கட்டான காலம் உனக்கல்ல தலைவா தமிழுக்கு..
திக்..திக்..என்ற இதயத் துடிப்போடு காத்திருக்கிறோம்…

உன் குரல் கேட்க வரும்போதெல்லாம்
உன் கருணை கண் பார்வையும் கையசைப்பும்
எங்கள் கண்ணுக்குள்ளே வந்து.. வந்து போகிறதே ..
எங்கள் விழிகள் குளமாகிறதே …
வீழ்ந்த இனத்தை வீறு கொண்டு எழ வைத்தவனே
என் தலைவா ..எழுந்து வா…
விழுந்தடித்து வருகிறோம்
எங்கள் தலைவனை காண தலைநகருக்கு..

– இசக்கிராஜன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories