இன்றைய இரவுப் பயணம்… தவிர்ப்பது நல்லது!

kauvery hospital 1 - 2026

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப் பட்ட திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து காவேரி  மருத்துவமனையே அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிலையில், தமிழகமெங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

இன்று மாலை 6.30க்கு காவேரி மருத்துவமனை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் திமுக.,வினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக எதுவும் இடம்பெறவில்லை. எனவே தொண்டர்கள் சோகம் அடைந்தனர்.

கடந்த வாரம் மருத்துவமனை வளாகத்தில் அதிக அளவில் திரண்டிருந்த தொண்டர்கள், ஓரிரு நாள்கள் கழித்து, கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுளளதாகக் கூறப்பட்டதால், சமாதானம் அடைந்து கலந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று திடீரென மருத்துவமனை அறிக்கை வெளியானதால், திமுக தொண்டர்கள் சோகம் அடைந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் திமுக., தொண்டர்கள் சென்னையை நோக்கி விரைந்துள்ளனர். கடந்த வாரம், கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரவிய போது, உணர்ச்சி வசப்பட்ட சென்னை கொளத்தூர் தொகுதி திமுக.,வினர் கார் கண்ணாடிகளை அடித்தும், கற்கள் வீசியும், ஏடிஎம், இயந்திரத்தை உடைத்தும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

ALSO READ:  பாலமேடு - வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

இந்நிலையில், இன்று உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் விரைவாகப் பரவியதால் தொண்டர்கள் சென்னையில் கூடி வருகின்றனர். இதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை போலீஸார் விரைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், தங்கள் பணிமனை பேருந்துகளை வெளியூர்களில் இரவு நேரங்களில் நிறுத்திவிட்டு தங்க வேண்டாம் என்று ஓட்டுநர், நடத்துனர்களை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் பல கேட்டுக் கொண்டன. இதனால் பல பேருந்துகள் பணிமனையை நோக்கி திருப்பப் பட்டன.

இந்நிலையில் அசாதாரண சூழல் நிலவுவதால், பொதுமக்கள் இரவுப் பயணங்களை மேற்கொள்வது நல்லதல்ல என்று பலரும் தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு அறிவுறுத்தியபடி இருந்தனர்.

1 COMMENT

  1. எது நடந்தாலும் அது விதிப்படி நடக்கும்.
    அதனால் பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது.
    தொண்டர்கள் அமைதியான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
    அதுவே தலைவருக்கு செலுத்தும் மரியாதை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories