இன்றைய இரவுப் பயணம்… தவிர்ப்பது நல்லது!

kauvery hospital 1 - 2026

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப் பட்ட திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து காவேரி  மருத்துவமனையே அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிலையில், தமிழகமெங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

இன்று மாலை 6.30க்கு காவேரி மருத்துவமனை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் திமுக.,வினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக எதுவும் இடம்பெறவில்லை. எனவே தொண்டர்கள் சோகம் அடைந்தனர்.

கடந்த வாரம் மருத்துவமனை வளாகத்தில் அதிக அளவில் திரண்டிருந்த தொண்டர்கள், ஓரிரு நாள்கள் கழித்து, கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுளளதாகக் கூறப்பட்டதால், சமாதானம் அடைந்து கலந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று திடீரென மருத்துவமனை அறிக்கை வெளியானதால், திமுக தொண்டர்கள் சோகம் அடைந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் திமுக., தொண்டர்கள் சென்னையை நோக்கி விரைந்துள்ளனர். கடந்த வாரம், கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரவிய போது, உணர்ச்சி வசப்பட்ட சென்னை கொளத்தூர் தொகுதி திமுக.,வினர் கார் கண்ணாடிகளை அடித்தும், கற்கள் வீசியும், ஏடிஎம், இயந்திரத்தை உடைத்தும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், இன்று உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் விரைவாகப் பரவியதால் தொண்டர்கள் சென்னையில் கூடி வருகின்றனர். இதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை போலீஸார் விரைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், தங்கள் பணிமனை பேருந்துகளை வெளியூர்களில் இரவு நேரங்களில் நிறுத்திவிட்டு தங்க வேண்டாம் என்று ஓட்டுநர், நடத்துனர்களை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் பல கேட்டுக் கொண்டன. இதனால் பல பேருந்துகள் பணிமனையை நோக்கி திருப்பப் பட்டன.

இந்நிலையில் அசாதாரண சூழல் நிலவுவதால், பொதுமக்கள் இரவுப் பயணங்களை மேற்கொள்வது நல்லதல்ல என்று பலரும் தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு அறிவுறுத்தியபடி இருந்தனர்.

1 COMMENT

  1. எது நடந்தாலும் அது விதிப்படி நடக்கும்.
    அதனால் பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது.
    தொண்டர்கள் அமைதியான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
    அதுவே தலைவருக்கு செலுத்தும் மரியாதை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories