இன்றைய இரவுப் பயணம்… தவிர்ப்பது நல்லது!

kauvery hospital 1 - 2026

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப் பட்ட திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து காவேரி  மருத்துவமனையே அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிலையில், தமிழகமெங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

இன்று மாலை 6.30க்கு காவேரி மருத்துவமனை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் திமுக.,வினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக எதுவும் இடம்பெறவில்லை. எனவே தொண்டர்கள் சோகம் அடைந்தனர்.

கடந்த வாரம் மருத்துவமனை வளாகத்தில் அதிக அளவில் திரண்டிருந்த தொண்டர்கள், ஓரிரு நாள்கள் கழித்து, கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுளளதாகக் கூறப்பட்டதால், சமாதானம் அடைந்து கலந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று திடீரென மருத்துவமனை அறிக்கை வெளியானதால், திமுக தொண்டர்கள் சோகம் அடைந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் திமுக., தொண்டர்கள் சென்னையை நோக்கி விரைந்துள்ளனர். கடந்த வாரம், கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரவிய போது, உணர்ச்சி வசப்பட்ட சென்னை கொளத்தூர் தொகுதி திமுக.,வினர் கார் கண்ணாடிகளை அடித்தும், கற்கள் வீசியும், ஏடிஎம், இயந்திரத்தை உடைத்தும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், இன்று உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் விரைவாகப் பரவியதால் தொண்டர்கள் சென்னையில் கூடி வருகின்றனர். இதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை போலீஸார் விரைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், தங்கள் பணிமனை பேருந்துகளை வெளியூர்களில் இரவு நேரங்களில் நிறுத்திவிட்டு தங்க வேண்டாம் என்று ஓட்டுநர், நடத்துனர்களை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் பல கேட்டுக் கொண்டன. இதனால் பல பேருந்துகள் பணிமனையை நோக்கி திருப்பப் பட்டன.

இந்நிலையில் அசாதாரண சூழல் நிலவுவதால், பொதுமக்கள் இரவுப் பயணங்களை மேற்கொள்வது நல்லதல்ல என்று பலரும் தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு அறிவுறுத்தியபடி இருந்தனர்.

1 COMMENT

  1. எது நடந்தாலும் அது விதிப்படி நடக்கும்.
    அதனால் பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது.
    தொண்டர்கள் அமைதியான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
    அதுவே தலைவருக்கு செலுத்தும் மரியாதை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories