December 5, 2025, 7:24 PM
26.7 C
Chennai

இன்றைய இரவுப் பயணம்… தவிர்ப்பது நல்லது!

kauvery hospital 1 - 2025

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப் பட்ட திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து காவேரி  மருத்துவமனையே அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிலையில், தமிழகமெங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

இன்று மாலை 6.30க்கு காவேரி மருத்துவமனை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் திமுக.,வினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக எதுவும் இடம்பெறவில்லை. எனவே தொண்டர்கள் சோகம் அடைந்தனர்.

கடந்த வாரம் மருத்துவமனை வளாகத்தில் அதிக அளவில் திரண்டிருந்த தொண்டர்கள், ஓரிரு நாள்கள் கழித்து, கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுளளதாகக் கூறப்பட்டதால், சமாதானம் அடைந்து கலந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று திடீரென மருத்துவமனை அறிக்கை வெளியானதால், திமுக தொண்டர்கள் சோகம் அடைந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் திமுக., தொண்டர்கள் சென்னையை நோக்கி விரைந்துள்ளனர். கடந்த வாரம், கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரவிய போது, உணர்ச்சி வசப்பட்ட சென்னை கொளத்தூர் தொகுதி திமுக.,வினர் கார் கண்ணாடிகளை அடித்தும், கற்கள் வீசியும், ஏடிஎம், இயந்திரத்தை உடைத்தும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், இன்று உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் விரைவாகப் பரவியதால் தொண்டர்கள் சென்னையில் கூடி வருகின்றனர். இதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை போலீஸார் விரைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், தங்கள் பணிமனை பேருந்துகளை வெளியூர்களில் இரவு நேரங்களில் நிறுத்திவிட்டு தங்க வேண்டாம் என்று ஓட்டுநர், நடத்துனர்களை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் பல கேட்டுக் கொண்டன. இதனால் பல பேருந்துகள் பணிமனையை நோக்கி திருப்பப் பட்டன.

இந்நிலையில் அசாதாரண சூழல் நிலவுவதால், பொதுமக்கள் இரவுப் பயணங்களை மேற்கொள்வது நல்லதல்ல என்று பலரும் தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு அறிவுறுத்தியபடி இருந்தனர்.

1 COMMENT

  1. எது நடந்தாலும் அது விதிப்படி நடக்கும்.
    அதனால் பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது.
    தொண்டர்கள் அமைதியான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
    அதுவே தலைவருக்கு செலுத்தும் மரியாதை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories