January 25, 2025, 2:43 PM
28.7 C
Chennai

திருவாரூர் கட்டட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: திருமாவளவன் கோரிக்கை

சென்னை:
திருவாரூர் கட்டட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடுதர வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
 திருவாரூர் பல்கலைக்கழகக் கட்டட விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டதாகவும், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.  தமிழக அரசு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாயும் இழப்பீடு வழங்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
திருவாரூர் மாவட்டம், கங்களாஞ்சேரி அருகே நாக்குடி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில்,  250 கோடி ரூபாய் செலவில் மத்திய பல்கலைக்கழக கட்டுமானப் பணி நடந்து வருகிறது. அங்கு இன்று (29-3-2015) காலை கான்கிரீட் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்றபோது, மேற்கூரையும் சுவரும் இடிந்து விழுந்து வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மத்திய பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் கட்டுமானப் பணியிலேயே பாதுகாப்பற்ற, தரமற்ற நிலை இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.  இந்தக் கட்டட விபத்துக்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தற்போது பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் தொழிலாளர்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். அங்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகளில் வெளி மாநிலத் தொழிலாளர்களே அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்குக் குறைவான சம்பளம் கொடுக்கப்படுவதோடு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. கட்டுமான நிறுவனங்கள் ஏறக்குறைய அவர்களைக் கொத்தடிமைகளாகவே நடத்துகின்றன.  இதைத் தமிழக அரசு அனுமதிப்பது முறையல்ல.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காகவும் நலன்களுக்காகவும் உடனடியாக சிறப்புத் திட்டம் ஒன்றை வகுக்கவேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. – என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.