தேவாரம் அருகே அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தி 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அம்பரப்பர் மலை முன்பு போராட்டம் நடத்தினர். பொட்டிப் புரம், புதுக்கோட்டை, சின்ன பொட்டிப்புரம், ராமகிருஷ்ண புரம், தம்மிநாயக்கன்பட்டி ஆகிய 5 கிராமங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் அம்பரப்பர் மலையடிவாரத்தில் குவிந்தனர். டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களில் பொதுமக்கள் வந்தனர். பொட்டிப்புரத்தில் நியூட் ரினோ ஆய்வு மையம் அமைக் கும் திட்டத்திற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மலையடி வாரத்தில் திடீர் போராட்டத் தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத் தினர். அனுமதியின்றி போராட் டம் நடத்துவது தவறு என்றும், கலைந்து செல்லா விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் அனைவரும் புதுக்கோட்டை கிராமத்தில் கூடி, ஆலோசனை நடத்தினர். அப்போது, அம்பரப்பர் மலையடி வாரத்தில் உள்ள அம்பராயன் கோவிலில் திருவிழா நடத்துவது, நியூட்ரினோ ஆய்வு திட்டத்தின் ஆபத்து குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நியூட்ரினோ திட்டத்தை நிரந்தரமாக தடை செய்யும் வகையில் அறவழியில் தொடர்ந்து போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.
நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு; ஆர்ப்பாட்டம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari