மதுரை: மதுரையில் ஆசிரிர் ஒருவரின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன. மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் அகமது. ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாஜிதா (34). இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சாஜிதாவுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையில் மீண்டும் தம்பதியினர் குழந்தை பெற விரும்பினர். ஆனால் அவருக்கு தவறான கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததால் இயற்கை முறையில் குழந்தை பிறக்காது என கூறப்பட்டது. இதன் பின் செயற்கை கருத்தரிப்பு மூலம் சாஜிதா கருவுற்றார். இந்நிலையில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவத்துக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாஜிதாவிற்கு 2 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் பிறந்தன. இது குறித்து மருத்துவமனை டீன் கூறிய போது, ‘சாஜிதாவுக்கு 4 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளன. ஒவ்வொரு குழந்தைகளும் சராசரியாக ஒரு கிலோ 500 கிராம் எடை உள்ளன. இதில் குழந்தைகளுக்கு சற்று மூச்சுத் திணறல் உள்ளது. இதனால் 2 குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தாய் நலமாக உள்ளார். இந்த மருத்துவமனையில் 4 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறப்பது இதுவே முதல் முறை” என்றார்.
ஆசிரியரின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari