
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இருக்கும் தமிழக மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி கோரி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மக்களாட்சித் தத்துவத்தின் ஆணிவேராகவும், ஆரம்பப் புள்ளியாகவும் திகழும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இருக்கும் வாக்காளப் பெருமக்கள், தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றி வரும் வளர்ச்சிப் பணிகளை எண்ணிப் பார்த்து, தங்களது பொன்னான வாக்குகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு “இரட்டை இலை” சின்னத்திலும், கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னங்களிலும் வழங்கிட வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ் நாட்டில் வன்முறைக்கு இடம் தராத அன்பின் வழி நின்ற ஆட்சி அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அமைதியான சூழல் உள்ளாட்சி நிர்வாகத்திலும் இருந்திட வேண்டும் என்றால், அதற்கு தீய சக்திகளை ஒழித்து, நல்லவர்கள் கையில் உள்ளாட்சிப் பதவிகள் இருப்பது அவசியம் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். எனவே தான், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் உங்களது பொன்னான வாக்குகளை “இரட்டை இலை” சின்னத்தில் வழங்க வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறோம்.
2018-ஆம் ஆண்டு பருவமழை பெய்யாததால் மாநிலத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவமழை பொய்த்ததன் காரணமாக ஊரகப் பகுதிகளில் குடிநீர் வழங்குவதில் பெரும் சவால்கள் ஏற்பட்டன. இருப்பினும் இப்பிரச்சினைகளை சமாளிக்க அனைத்து நிதி ஆதாரங்களையும் ஒருங்கிணைத்து தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை அம்மாவின் அரசு மேற்கொண்டு, முறையாக குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடு தொடர்பான புகார்களை பதிவு செய்ய மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறைதீர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம்