December 5, 2025, 6:36 PM
26.7 C
Chennai

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் காலி பண்ண துணிந்த மனைவி!

husband - 2025

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.. 30 வயதாகிறது.. இவர் ஒரு மெக்கானிக்.. போன 29-ம் தேதி சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் எலக்ட்ரிக் ரெயிலில் இவர் பயணம் செய்தார்.

அப்போது, அரக்கோணம் அருகே தவறி விழுந்து விட்டதாக கூறி அரக்கோணம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர்.

இவ்வளவு நாள் தீவிர சிகிச்சை நடந்து வந்த நிலையில், அவரிடம் அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.. அப்போது ராஜேந்திரன் சொன்னதாவது: “நான் 29-ம் தேதி மதியம், திருத்தணி முருகன் கோயிலுக்கு போகலாம்னு சென்னை ஆவடி ரயில்வே ஸ்டேஷனில் ஏறினேன்.

wife - 2025

அரக்கோணத்திற்கும், திருத்தணிக்கும் நடுவில் காட்டு ரயில்வே பிரிட்ஜ் அருகே ரயில் வந்தபோது, ஒரு பெண்ணும் 3 பேரும் சேர்ந்து திடீரென என்னை கொலை செய்வதற்காக ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.

அந்த பெண் உட்பட எல்லாருமே முகத்தை கர்சீப்பால் கட்டி இருந்தனர். எனக்கும், என் மனைவி அஸ்வினிக்கும் நிறைய தகராறு இருக்கிறது.. ஒருவேளை அஸ்வினிதான் இப்படி கூலிப்படையை ரெடி பண்ணி என்னை கொலை செய்ய பிளான் பண்ணி இருப்பாள் என்று சந்தேகமாக இருக்கிறது” என்றார்.

இதையடுத்து போலீசார் அஸ்வினியை பிடித்து விசாரித்தனர். அப்போது, “எனக்கும் அனுராக் என்பவருக்கும் கள்ள உறவு இருக்கு. இது என் கணவனுக்கு தெரிந்துவிட்டது.. எங்களை பிரிக்க படாத பாடு பட்டார்.. இதனால் எங்களுக்கு ஆத்திரம் வந்தது. அனுராக்குடன் செல்போனில் பேசினால்கூட அவருக்கு ஆகாது. அதனால்தான் அவரை கொல்ல முடிவு செய்தோம்.

husband wife - 2025

ஆனால் அவர் “நீ திருந்தணும். திரும்பவும்என்கிட்டயே வந்துடணும். அதுக்காக திருத்ததணி கோயிலுக்கு போய் வேண்டிட்டு வர்றேன்”ன்னு என்கிட்டயே சொல்லிட்டு கிளம்பினாரு.

உடனே நான், அனுராக்கிற்கு இந்த விஷயத்தை சொன்னேன்.. அவருடைய தம்பி, நண்பருடன் சேர்ந்து கொல்ல பிளான் செய்தோம். ரயிலில் இருந்து தடுமாறி விழுந்து இறந்துவிட்டதாக சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்து, ரயிலுக்குள் ஏறி கொண்டோம். பிரிட்ஜ் வந்ததும் தள்ளிவிட்டோம்” என்றார்.

ரயிலில் இருந்து அனைவரும் சேர்ந்து தள்ளிவிட்டாலும், அந்த நேரத்தில் ரயில் மெதுவாக சென்றிருக்கிறது. அதனால்தான் தண்டவாளம் ஓரத்திலேயே விழுந்து்ள்ளார்.

கீழே விழுந்ததில் ராஜேந்திரன் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லாமல் படுகாயங்களுடன் பிழைத்துள்ளார் என்கிறார்கள் காவல்துறையினர். இப்போது, அஸ்வினி, கள்ளக்காதலன் அனுராக், கமலேஸ்வரன், தினேஷ் ஆகிய 4 பேரும் வேலூர் ஜெயிலில் உள்ளனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories