December 6, 2025, 7:04 PM
26.8 C
Chennai

ஊரை குப்பையாக்கும் குடிமக்களுக்கு அபராதம்! தமிழக அரசு ஆணை!

kuppai - 2025

சென்னை மாநகராட்சியில் மொத்தமாக இருக்கும் 15 மண்டலங்கள் மற்றும் 200 வார்டுகளில் ஒரு நாளைக்கு சுமார் 5 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.

இந்த குப்பைகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் கொட்டப்படுகிறது. சென்னையில் 60% மக்கள் மட்டுமே தரம் பிரித்துக் கொடுக்கப்படுவதாகவும், மாநகராட்சி விதிகளைப் பின்பற்றுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குப்பைகளை முறையாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும், மக்கள் அதனைச் செயல்படுத்துவதாகத் தெரியவில்லை. அதனால், குப்பை உருவாக்குபவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

kuppai 2 - 2025

கடந்த 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி, பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதமும், குப்பையை உருவாக்குபவர்களிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விதி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு அதற்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

tamil nadu arasu - 2025

அதன் படி வீடுகள், வணிக நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், தியேட்டர்கள், அரசு அலுவலகங்கள், தொழில் உரிமம் பெற்ற கடைகள் உள்ளிட்டவைகளுக்கு கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கும், மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம்களுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் கூட கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

abaratham - 2025

மேலும், பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கும், குப்பையைத் தரம் பிரித்து வழங்காதவர்களுக்கும், கட்டுமான கழிவுகளைச் சட்ட பொது இடத்தில் கொட்டுபவர்களுக்கும் குப்பையை எரிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

kuppai 1 - 2025

இந்த விதிகள் தற்போது சென்னையில் அமல்படுத்தப்பட உள்ளது. இன்னும் சில காலங்களில் மற்ற மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories