நெகிழ்ச்சி..! ஓடும் ஆட்டோவில் திடீர் நெஞ்சுவலி! சாகும் நிலையிலும் மாணவிகளைக் காத்த டிரைவர்!

auto 2 - 2026

தூத்துக்குடியில் ஓடும் ஆட்டோவில் திடீர் நெஞ்சு வலி வந்து தவித்தார் அந்த ஆட்டோ டிரைவர்! ஆட்டோ ஓட்டிய நிலையில் அவரது உயிர் பிரிந்தது. ஆனாலும், தனது உயிர் போகும் நிலையிலும் சமயோசிதமாக செயல்பட்டு ஆட்டோவை ஓரமாக நிறுத்தி மாணவிகள் பலரின் உயிரைக் காத்தது அப்பகுதி வாசிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த 54 வயது ராமலிங்கம் ஆட்டோ ஓட்டி வந்தார். அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாணவிகளை ஏற்றிச் சென்று தனது வாழ்க்கையை ஓட்டிவந்தார். இந்நிலையில், நேற்று மாலை ராமலிங்கம் தனது ஆட்டோவில் வழக்கம் போல் மாணவிகளை ஏற்றிச் செல்வதற்காக விஇ ரோட்டில் ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.

மாணவிகள் சிலர் ஆட்டோவில் ஏறிய நிலையில் திடீரென ராமலிங்கத்துக்கு மயக்கம் வந்துள்ளது. கண்கள் செருகிய நிலையில் அவர் மயங்கி விழுந்தது கண்டு, அக்கம்பக்கத்தினர் பதறிப் போய் அவருக்கு தண்ணீர் கொடுத்து அப்போதைக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில் தனது உடல் நிலையைக் கருதி, தனது ஆட்டோவில் ஏறிய மாணவிகளை வேறு ஆட்டோவில் ஏற்றி விட முயன்றுள்ளார் ராமலிங்கம். ஆனால் அந்த நேரம் வேறு ஆட்டோ எதுவும் அங்கே வரவில்லை.

இதனால் மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தானே மீண்டும் ஆட்டோவை இயக்கி, மாணவிகளை விட்டுவிடவேண்டும் என்று ஆட்டோவை இயக்கியுள்ளார். அவர், தூத்துக்குடி கீழ ரத வீதியில் சென்ற போது, மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதனால் துடிதுடித்த அவர், அந்த வலியையும் தாங்கிக் கொண்டு, சாலை ஓரமாக ஆட்டோவை நிறுத்தி விட்டு… சில நொடிகளில் தனது டிரைவர் ஸீட்டிலேயே மயங்கி சரிந்துள்ளார்.

அவரது நிலை கண்டு கதறிய மாணவிகள், ராமலிங்கத்தை தட்டி எழுப்ப முயற்சி செய்துள்ளனர். இதை அடுத்து அங்கு ஓடி வந்த சிலர், அவரை ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

உயிர் போகும் நிலையிலும் மாணவிகளை பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு சென்று விட வேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன் ஆட்டோவை இயக்கி, பின்னரும் தனக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியையும் தாங்கி ஆட்டோவை பத்திரமாக நிறுத்தி மாணவிகளின் உயிரை காத்த ஆட்டோ டிரைவர் ராமலிங்கத்தின் செயலை நினைத்து நினைத்து, மாணவிகளின் பெற்றோரும், அங்குள்ளவர்களும் நெகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories