வேளாங்கண்ணி சென்று வரும்போது… பழுதாகி நின்ற வேனுடன் தனியார் பஸ் மோதி… 3 பேர் உயிரிழப்பு!

accident near tenkasi - 2026

வேளாங்கண்ணிக்கு சென்று விட்டுத் திரும்பிய நிலையில் பழுதாகி நின்ற வேன் மீது பஸ் மோதி 3 பேர் உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா சிவகிரியில் இருந்து தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அருளாட்சி மெயின் சாலைக்கும் உள்ளார் நடுவில் உள்ள தனியார் கடைக்கும் அருகே, வேளாங்கண்ணி சர்ச்சுக்கு சென்று விட்டு மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற ஆம்னி வேன், இன்று காலை 4 மணி அளவில் பழுதாகி நின்றது

அதிலிருந்தவர்களை மாற்று வண்டியில் ஏற்றிவிட்டு ஆம்னி வேன் டிரைவர் மற்றும் இருவர் மட்டும் பழுதடைந்த ஆம்னி காரை சரி செய்வதற்காக விபத்து ரெக்கவரி வாகனத்தில் ஏற்றிவிட்டுச் செல்ல தயாராக இருந்தனர். அந்த நிலையில் எதிர்பாராத விதமாக, சென்னையிலிருந்து செங்கோட்டை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து திடீரென மோதியது.

accident near tenkasi1 - 2026

இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒருவருக்கு தலையில் தலையில் பலத்த அடி ஏற்பட்டும், மற்றொருவருக்கு உடம்பு முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டு, தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

போலீஸார் விசாரணையில் வேளாங்கண்ணி சர்ச்சுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பும்போது ஆம்னி வேன் பழுதாகி நின்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, உயிரிழந்தவர்கள் குறித்து முதல் தகவல் அறிக்கையில் ஆம்னி கார் ரெக்கவரி வேன் டிரைவர் சிவகாசியைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் இரண்டு பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories