ஆன்மிக கேள்வி பதில்: மகா சிவராத்திரி இரவு நேரத்தில் ஏன்..?!

Published:

sivan - 2026

ஆன்மீக கேள்வி பதில்:மகா சிவராத்திரி-
கேள்வி – 1 : மகா சிவராத்திரி பண்டிகையை இரவு நேரத்திலேயே ஏன் கொண்டாடுகிறோம்?

பதில்: இரவு விரதங்கள் சில உள்ளன . பகல் விரதங்கள் சில உள்ளன. மகா சிவராத்திரி என்பது ‘அஹோ ராத்திரி’ விரதம் எனப்படுகிறது. பகலும் இரவும் கூட கடைபிடிக்க வேண்டியது. இதன் பெயரிலேயே ராத்திரி என்பது உள்ளது. இரவுநேர வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் காணப்படுகிறது.

மேலும் தேவிக்குக் கூட நவராத்திரி என்று நாம் கொண்டாடுகிறோம்.

இரவு என்பது ‘அந்தர்முக’ நிலைமைக்குக் குறியீடு. அதனால் உள்நோக்கி ஆழும் நிலைக்கு இடமளிக்கும் இரவில் செய்யும் வழிபாடுகளில் தியானத்திற்கும் ஞானத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அது போன்றவற்றை இரவு விரதங்களாகவே கடைப்பிடிப்பது வழக்கம்.

செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விரதங்களை பகல் நேரத்தில் கடைபிடிப்பார்கள். அதனால்தான் இது மகாசிவராத்திரி.

samavedam 1 - 2026

அதோடு மகாதேவர், லிங்கோத்பவ காலமான ‘துரீய சந்தியா’ நேரத்தில் ஒரு மகா அக்னி லிங்கமாக முதல், இடை, கடை இல்லாத தன் தத்துவத்தை வெளிப்படுத்தியதால் இந்த இரவுக்கு முக்கியத்துவம் உள்ளது. அது நடந்தேறியது மாசி மாதம், கிருஷ்ணபக்ஷ சதுர்தசி அர்த்த ராத்திரி நேரத்தில். அதனால் அந்த நள்ளிரவை நாம் சிவராத்திரி விரதமாக மேற்கொள்கிறோம். அதனால் இது இரவைப் பிரதானமாக கொண்ட பண்டிகையாக கருதப்படுகிறது.

  • தெலுங்கில் : பிரம்மஶ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
    தமிழில்: ராஜி ரகுநாதன்
ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img