தென்காசி பள்ளிவாசலில் கூடியவர்கள் மீது தடியடி; போலீஸார் மீது கல்வீச்சு! “பெரிசு படுத்தாதீங்க.. ப்ளீஸ்”!

tenkasi mosque - 2026

144 தடையை மீறி வெள்ளிக்கிழமைக்கு பள்ளிவாசலில் நூற்றுக்கணக்கில் திரண்டவர்கள் குறித்து அறிந்து, தென்காசி போலீஸார் அதனைத் தடுத்துள்ளனர். பின்னர் வேறு வழியின்றி அவர்களை கலைந்து போகச் செய்ய தடியடி நடத்தினர். பதிலுக்கு போலீஸார் மீது கல்வீச்சும் செருப்பு வீச்சும் நடத்தப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டம் கூடுவதால் சமூக தொற்று பரவும் அபாயம் இருந்ததால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன.

மசூதிகளில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டது. இஸ்லாமிய மத தலைவர்களும் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே தொழுகை நடத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இன்று தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் ஊடங்கு உத்தரவை மீறி நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். இதை அடுத்து, தென்காசி டிஎஸ்பி கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அந்த இடத்துக்குச் சென்றனர்.

ஐமாத் நிர்வாகிகளிடம் பேசி, அனைவரையும் வெளியே வருமாறு போலீசார் கூறினர். இதை ஏற்காமல் வாக்குவாதம் செய்து, நாற்காலிகள் உள்ளிட்டவைகளை அவர்கள் போலீஸார் மீது வீசியதாகக் கூறப்படுகிறது. போலீஸார் மீண்டும் அங்கே கூடியவர்களை கலந்து போகுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அதைக் கேட்கும் மனநிலையில் பள்ளிவாசலில் கூடியவர்கள் இல்லை.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

இதை அடுத்து வலுக்கட்டாயமாக அங்கிருந்தவர்களை லேசாக தடியடி நடத்தி கலைந்து போகச் செய்துள்ளனர். தடியடி நடத்தியதில் ஓரிருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளிவாசலில் சிலர் போலீஸார் மீது கற்களை வீசியும், செருப்புகளை வீசியும் தாக்கியுள்ளனர். இதில், காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தென்காசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சிலரிடம் போலீசார் பேசிக் கொண்ட போது, செங்கோட்டையில் நடந்ததைப் போல் இதையும் பெரிசு படுத்திடாதீங்க… என்று கேட்டுக் கொண்டனர்.

எனினும் இது குறித்த வீடியோக்கள் இப்போது வாட்ஸ் அப் உள்ளிட சமூகத் தளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், உள்ளூர் போலீஸார் இதனைக் கையாளக் கூடாது என்றும், பழிவாங்கும் நடவடிக்கையில் முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்கள் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், துணை ராணுவப் படையினர் வரவழைக்கப் பட வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

அதே நேரம், தங்கள் பக்கம் தவறு இருக்கிறது என்றும், தடை உத்தரவு நேரத்தில் கூடியிருக்கக் கூடாது என்றும், கொரோனோ பரவும் விதத்தில் இஸ்லாமிய சமூகம் மீது ஏற்கெனவே ஒரு குற்றச்சாட்டு கிளப்பப் பட்டிருக்கும் நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் பின்னடைவாக இருக்கும் என்றும் உள்ளூர் ஜமாத்தார் தரப்பில் இருந்து வாட்ஸ் அப் வழியே தகவல் பரவிக் கொண்டிருந்தது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

Entertainment News

Popular Categories