December 6, 2025, 10:56 AM
26.8 C
Chennai

இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50; தப்ளிக் – 48; உயிரிழப்பு 6 ஆக உயர்வு!

beela rajesh - 2025
file picture

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 50 பேரில் தில்லி மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் 48 பேர் என்று தமிழக சுகாதாரச் செயலர் பியூலா ராஜேஷ் தெரிவித்தார்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 57 வயது பெண்மணி கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தார். இன்று பாதிப்புக்கு உள்ளான 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறைச் செயலர் பியூலா ராஜேஷ், கொரோனா பாதிப்பில், வீட்டுக் கண்காணிப்பில் 91,851 பேர் இருப்பதாகவும், அரசின் தனிமைப்படுத்தல் முகாம்களில் 205 பேர் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், 1,475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்றும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவியுள்ளது என்றும் தெரிவித்த பியூலா ராஜேஷ், இன்று மட்டும் 50 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்களில் அதில் 48 பேர் தில்லி தப்ளிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் கூறினார்.

தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு நேர்ந்த நிலையில் நேற்று தேனி, விழுப்புரத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 75 வயது முதியவர், சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்.3ம் தேதி அனுமதிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா உள்ளது உறுதியானது.

அதேபோல் சென்னையை சேர்ந்த 60 வயது முதியவர், கொரோனா பாதிப்புடன் கடந்த 1ம் தேதி ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (ஏப்.5) அதிகாலை 1.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண் இன்று உயிரிழந்தார். இதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரொனா பாதிக்கப் பட்டிருப்பவர்கள் பட்டியல்!

தமிழகத்தில் மொத்தம் 621 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

சென்னை – 110
கோயமுத்தூர் – 59
திண்டுக்கல்-45,
திருநெல்வேலி-38,
ஈரோடு-32,
திருச்சி-30,
நாமக்கல்-28,
ராணிப்பேட்டை-25,
செங்கல்பட்டு-24,
கரூர்-23,
தேனி-23,
மதுரை-19,
விழுப்புரம்-16,
கடலூர்-13,
சேலம், திருவள்ளூர், திருவாரூரில் தலா-12,
திருப்பத்தூர், விருதுநகர், தூத்துக்குடி, நாகப்பட்டினத்தில் தலா-11,
திருவண்ணாமலை-9,
தஞ்சாவூர்-8,
திருப்பூர்-7,
கன்னியாகுமரி, காஞ்சிபுரத்தில் தலா-6,
சிவகங்கை, வேலூரில் தலா-5,
நீலகிரி-4,
ராமநாதபுரம், கள்ளக்குறிச்சியில் தலா-2,
அரியலூர், பெரம்பலூரில் தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories