சென்னை:
தனியார் குடி நீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.
பொது மக்களின் குடிநீர் தேவையைத் தீர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தனியார் குடிநீர் கேன்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பில் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜி.எஸ்.டியில் 18 சதவீத வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து தனியார் கேன் உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்திருந்தனர்.
இதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் போராட்டத்தை துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று தெரிகிறது.