February 22, 2026, 8:12 PM
27.3 C
Chennai

மதியம் ஒரு மணிக்குப் பின் நடமாடினால்… கைது! ரெட் ஸோனில்!

ranipet collector sp
Ranipet Collector Divyadarshini and SP (File Picture)

1 மணிக்குப் பிறகு வெளியில் நடமாடினால் கைது! செய்யப் படுவார்கள் என்ற எச்சரிக்கையுடன் மீண்டும் ரெட் ஸோனுக்கு மாறியுள்ளது ராணிப்பேட்டை!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மேலும் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் சிவப்பு மண்டலத்துக்கு அந்த மாவட்டம் மாறியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே 39 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த 16 நாள்களில் புதியதாக யாருக்கும் தொற்று இல்லை. இந்த நிலையில், மேல்விஷாரத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் மகாராஷ்டிராவிலிருந்து கடந்த 27-ஆம் தேதி லாரிகளில் அமர இடம்பிடித்து ஊர் திரும்பியுள்ளார்.

இருமல் காய்ச்சலுடன் வந்த அவரை மாவட்ட எல்லையிலேயே பிடித்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். அவரது தொண்டை திரவத்தின் சோதனைமுடிவுகள் நேற்று வந்தது. அதில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை அடுத்து உடனடியாக அவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 33 பேர் ஏற்கெனவே பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக ராணிப்பேட்டை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஒருவருக்கு புதியதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் ராணிப்பேட்டை மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து மீண்டும் சிவப்பு மண்டலத்துக்கு மாறிவிட்டது. இங்கே கொரோனா தொற்று இரண்டாம் நிலையில்தான் இருக்கிறது. சமூகப் பரவலுக்குச் செல்லவில்லை..’’ என்று கூறினார்.

சிகப்பு மண்டலத்துக்கு மாறியுள்ள ராணிப்பேட்டையில் எடுக்கப் படும் பாதுகாப்புப் பணிகள் குறித்து எஸ்.பி மயில்வாகனன் கூறுகையில், “இன்று முதல் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்படுகிறது. வேறு மாவட்டத்திலிருந்து யாரும் உள்ளே வர முடியாது. இங்கிருந்தும் ஒருவரும் வெளியில் போக முடியாது. ஊரடங்கு முடியும் வரை இந்த நடைமுறை இருக்கும்.

அத்தியாவசியப் பொருள்கள் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும். ஓட்டுநர், கிளீனரைத் தவிர வேறு யாரும் வாகனங்களில் வரக் கூடாது. வீட்டை விட்டு காரணமின்றி யாரும் வெளியில் வரக் கூடாது. மதியம் ஒரு மணிக்கு மேல் வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள்’’ என்று எச்சரித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories