மதியம் ஒரு மணிக்குப் பின் நடமாடினால்… கைது! ரெட் ஸோனில்!

ranipet collector sp
Ranipet Collector Divyadarshini and SP (File Picture)

1 மணிக்குப் பிறகு வெளியில் நடமாடினால் கைது! செய்யப் படுவார்கள் என்ற எச்சரிக்கையுடன் மீண்டும் ரெட் ஸோனுக்கு மாறியுள்ளது ராணிப்பேட்டை!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மேலும் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் சிவப்பு மண்டலத்துக்கு அந்த மாவட்டம் மாறியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே 39 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த 16 நாள்களில் புதியதாக யாருக்கும் தொற்று இல்லை. இந்த நிலையில், மேல்விஷாரத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் மகாராஷ்டிராவிலிருந்து கடந்த 27-ஆம் தேதி லாரிகளில் அமர இடம்பிடித்து ஊர் திரும்பியுள்ளார்.

இருமல் காய்ச்சலுடன் வந்த அவரை மாவட்ட எல்லையிலேயே பிடித்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். அவரது தொண்டை திரவத்தின் சோதனைமுடிவுகள் நேற்று வந்தது. அதில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை அடுத்து உடனடியாக அவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 33 பேர் ஏற்கெனவே பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக ராணிப்பேட்டை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஒருவருக்கு புதியதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் ராணிப்பேட்டை மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து மீண்டும் சிவப்பு மண்டலத்துக்கு மாறிவிட்டது. இங்கே கொரோனா தொற்று இரண்டாம் நிலையில்தான் இருக்கிறது. சமூகப் பரவலுக்குச் செல்லவில்லை..’’ என்று கூறினார்.

சிகப்பு மண்டலத்துக்கு மாறியுள்ள ராணிப்பேட்டையில் எடுக்கப் படும் பாதுகாப்புப் பணிகள் குறித்து எஸ்.பி மயில்வாகனன் கூறுகையில், “இன்று முதல் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்படுகிறது. வேறு மாவட்டத்திலிருந்து யாரும் உள்ளே வர முடியாது. இங்கிருந்தும் ஒருவரும் வெளியில் போக முடியாது. ஊரடங்கு முடியும் வரை இந்த நடைமுறை இருக்கும்.

அத்தியாவசியப் பொருள்கள் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும். ஓட்டுநர், கிளீனரைத் தவிர வேறு யாரும் வாகனங்களில் வரக் கூடாது. வீட்டை விட்டு காரணமின்றி யாரும் வெளியில் வரக் கூடாது. மதியம் ஒரு மணிக்கு மேல் வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள்’’ என்று எச்சரித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories