மதியம் ஒரு மணிக்குப் பின் நடமாடினால்… கைது! ரெட் ஸோனில்!

ranipet collector sp
Ranipet Collector Divyadarshini and SP (File Picture)

1 மணிக்குப் பிறகு வெளியில் நடமாடினால் கைது! செய்யப் படுவார்கள் என்ற எச்சரிக்கையுடன் மீண்டும் ரெட் ஸோனுக்கு மாறியுள்ளது ராணிப்பேட்டை!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மேலும் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் சிவப்பு மண்டலத்துக்கு அந்த மாவட்டம் மாறியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே 39 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த 16 நாள்களில் புதியதாக யாருக்கும் தொற்று இல்லை. இந்த நிலையில், மேல்விஷாரத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் மகாராஷ்டிராவிலிருந்து கடந்த 27-ஆம் தேதி லாரிகளில் அமர இடம்பிடித்து ஊர் திரும்பியுள்ளார்.

இருமல் காய்ச்சலுடன் வந்த அவரை மாவட்ட எல்லையிலேயே பிடித்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். அவரது தொண்டை திரவத்தின் சோதனைமுடிவுகள் நேற்று வந்தது. அதில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை அடுத்து உடனடியாக அவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இவர்களில் 33 பேர் ஏற்கெனவே பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக ராணிப்பேட்டை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஒருவருக்கு புதியதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் ராணிப்பேட்டை மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து மீண்டும் சிவப்பு மண்டலத்துக்கு மாறிவிட்டது. இங்கே கொரோனா தொற்று இரண்டாம் நிலையில்தான் இருக்கிறது. சமூகப் பரவலுக்குச் செல்லவில்லை..’’ என்று கூறினார்.

சிகப்பு மண்டலத்துக்கு மாறியுள்ள ராணிப்பேட்டையில் எடுக்கப் படும் பாதுகாப்புப் பணிகள் குறித்து எஸ்.பி மயில்வாகனன் கூறுகையில், “இன்று முதல் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்படுகிறது. வேறு மாவட்டத்திலிருந்து யாரும் உள்ளே வர முடியாது. இங்கிருந்தும் ஒருவரும் வெளியில் போக முடியாது. ஊரடங்கு முடியும் வரை இந்த நடைமுறை இருக்கும்.

அத்தியாவசியப் பொருள்கள் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும். ஓட்டுநர், கிளீனரைத் தவிர வேறு யாரும் வாகனங்களில் வரக் கூடாது. வீட்டை விட்டு காரணமின்றி யாரும் வெளியில் வரக் கூடாது. மதியம் ஒரு மணிக்கு மேல் வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள்’’ என்று எச்சரித்தார்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories